search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முடிவு எடுக்கும் திறன்"

    • நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்களையும் யோசித்து பார்த்து முடிவெடுக்க வேண்டும்.
    • நடப்பதை ஏற்றுக்கொண்டு கடந்து செல்வதே சிறந்தது.

    இந்த விசயம் நம் அனைவரது வாழ்க்கையிலும் நடந்ததாகத்தான் இருக்கும். ஏனென்றால் நாம் அனைவரும் இந்த கொரோனா காலத்தை கடந்துதானே வந்திருக்கிறோம். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் தலைகீழாக மாறிப்போயிருக்கும்.

    நம்முடைய வாழ்க்கை தலைகீழாக மாறும்போது ஒரு சிலருக்கு வாழ்க்கைகுறித்த பயம் ஏற்படும். உதாரணத்திற்கு யாருக்காவது திடீரென வாழ்க்கையில் ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறது. அதைக்கண்டு நாம் முதலில் பயந்துவிடுவோம். ஐயோ நான் என்ன ஆகப்போகிறேனோ, எவ்வாறு பாதிக்கப்படபோகிறேனோ, அல்லது நஷ்டம் ஏற்படுமோ என்ற அளவிற்கு பயப்படுவோம். அதுவே இரண்டு நாட்களுக்கு பிறகு அதற்கேற்ற வழியினை தெரிந்துகொண்டு அதனை எதிர்கொள்வதற்கு கற்றுக்கொள்வோம். அதில் இருந்து நாம் எவ்வாறு மீண்டுவந்தோம் என்று மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் அளவுக்கு அந்த விஷயம் நமக்கு உணர்த்திவிட்டு சென்றுவிடுகிறது.

    சிலநேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் எதிர்கொள்ளவே முடியாத அளவிற்கான பிரச்சினைகள் கூட வரும். அப்படி வந்தால் அதன்மூலம் நம்முடைய வாழ்க்கைமுடிகிறது என்று இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம் தான் என்றாலும் வாழ்க்கை பாடத்தில் பல பெரிய பிரச்சினைகளை கையாள கற்றுக்கொள்ளும் போது எதையுமே துணிச்சலாக செய்வதற்கும், அதன் யதார்த்தத்தை புரிந்து கொள்வதும் எளிதாக இருக்கும்.

    நம்முடைய வாழ்க்கையில் ஏன் நமக்கு மட்டும் இவ்வாறு நடக்கிறது என்று நினைத்து வாழ்வதைவிட, நமது வாழ்க்கையில் நடப்பதை ஏற்றுக்கொண்டு இது இப்படித்தான் என்று எடுத்துக்கொண்டு கடந்து செல்வதே சிறந்தது. இதையே யோசித்துக்கொண்டு இருந்தால் அதில் எந்த பலனும் இருக்காது. அதில் இருந்து நாம் எவ்வாறு மீண்டு வெளியே வருவோம் என்பதில் நம் எண்ணங்கள் தேங்கி நின்றுவிடுகிறது.

    அதனால் ஒரு கஷ்டம் வந்தால் அதை ஏற்றுக்கொண்டு அந்த கஷ்டத்தில் இருந்து எவ்வாறு வெளியேற என்ன வழி என்பதைத்தான் நினைக்க வேண்டும். அதிலும் இந்த கஷ்டமான நேரத்திலும் நமக்கு என்ன நஷ்டம் ஏற்படும் என்பதையும் தாங்கிக்கொண்டு முடிவு எடுப்பதே சிறந்தது. நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்களையும் யோசித்து பார்த்து முடிவெடுக்க வேண்டும். இதுவே நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு வழிவகுக்கும்.

    உங்களுடைய வாழ்க்கையில் மிகவும் கடுமையான சந்தர்ப்பங்களை எதிர்கொண்டு வருகிறீர்கள் என்றால் எதிர்மறை எண்ணங்களை விடுத்து இப்போதைக்கு என்ன தேவை என்பதை மட்டும் புரிந்துகொண்டு அதன்படி செல்வதே சிறந்ததாக இருக்கும். அப்போது தான் வாழ்க்கையில் இப்போது என்னென்ன விஷயங்கள் நமக்கு சந்தோசத்தை தருகிறதோ அது இந்த நிலைமையில் இருந்து கடந்து செல்வதற்கும், வாழ்கையில் அடுத்த நிலையை நாம் அடைவதற்கும் உதவி செய்யும்.

    ×