search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேர்மறை எண்ணங்கள்"

    • வாழ்க்கையில் ஒருசில பழக்கவழக்கங்களை தொடர்ந்து பலன் தரும்.
    • நேர்மறையான எண்ணங்களை மனதில் விதையுங்கள்.

    அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க ஒருசில பழக்கவழக்கங்களை தொடர்ந்து பின்பற்றுவது பலன் தரும்.

    1. நட்பு வட்டம் உங்கள் நலனில் அக்கறை கொள்வதாக அமைய வேண்டும். உங்களுடைய செயல்பாடுகளை நேர்மறையாக விமர்சித்து நல்வழிப்படுத்தும் நல் உள்ளங்களுடன் நட்புறவை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு செயல்பாடுகளையும் ஊக்குவித்து நிறை, குறைகளை தவறாமல் சுட்டிக்காட்டுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.

    2. மற்றவர்கள் உங்களிடம் கருத்து கேட்டாலோ, உதவி கேட்டாலோ உங்கள் மனதில் எழும் எண்ணங்களை தயங்காமல் வெளிப்படுத்திவிடுங்கள். உங்கள் மனம் `இல்லை' என்று சொல்ல நினைக்கும். அதன் விருப்பத்துக்கு மாறாக `ஆம்' என்று சொல்லாதீர்கள். நீங்கள் விரும்பாத விஷயங்களை செய்தால் உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்வதாக அமைந்துவிடும். அது தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் குலைத்துவிடும்.

    3. தினமும் உறுதிமொழி எடுங்கள். `இன்று என்னால் முடிந்ததை செய்துள்ளேன்' என்பது போன்ற மந்திரமாக அது அமையட்டும். பிறருக்கு உங்களால் இயன்ற உதவிகளை தயங்காமல் செய்யுங்கள். அது உங்களுக்கு நேர்மறை உணர்வைத் தரும்.

    4. கடினமான காலங்களில் உங்களுக்கு பக்கபலமாக இருந்தவர்களுக்கு நன்றியுடன் இருங்கள். பிறர் செய்யும் சின்னச்சின்ன உதவிகளுக்கு கூட நன்றி சொல்ல மறக்காதீர்கள். நேர்மறையான எண்ணங்களை மனதில் விதையுங்கள். அது மன வலிமையை தரும்.

    5. இசை கூட ஒரு வகையான சிகிச்சை முறைதான். அதற்கு மனதை சாந்தப்படுத்தி மகிழ்ச்சியான சூழலை உருவாக்கும் சக்தி உண்டு. வேகமான, உற்சாகமான வரிகள் கொண்ட பாடல்கள் நேர்மறை உணர்ச்சிகளை வெளிக்கொணர்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    6. கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள். எதிர்காலத்தைப் பற்றி அதிகமாக சிந்தித்தும் கவலை கொள்ளாதீர்கள். தற்போது கிடைத்ததை சிறப்பாகப் பயன்படுத்துங்கள். வாழ்க்கையை மன நிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் அனுபவிக்கும் திருப்தியை அது தரும்.

    7. எப்போதும் நண்பர்களிடம் ஆலோசனை கேட்பது ஏற்புடையதாக இருக்காது. உங்கள் உள்ளுணர்வின் அடிப்படையில் முடிவுகளை எடுங்கள். அது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சிறப்பாக செயல்பட வழிகாட்டும்.

    • நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்களையும் யோசித்து பார்த்து முடிவெடுக்க வேண்டும்.
    • நடப்பதை ஏற்றுக்கொண்டு கடந்து செல்வதே சிறந்தது.

    இந்த விசயம் நம் அனைவரது வாழ்க்கையிலும் நடந்ததாகத்தான் இருக்கும். ஏனென்றால் நாம் அனைவரும் இந்த கொரோனா காலத்தை கடந்துதானே வந்திருக்கிறோம். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் தலைகீழாக மாறிப்போயிருக்கும்.

    நம்முடைய வாழ்க்கை தலைகீழாக மாறும்போது ஒரு சிலருக்கு வாழ்க்கைகுறித்த பயம் ஏற்படும். உதாரணத்திற்கு யாருக்காவது திடீரென வாழ்க்கையில் ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறது. அதைக்கண்டு நாம் முதலில் பயந்துவிடுவோம். ஐயோ நான் என்ன ஆகப்போகிறேனோ, எவ்வாறு பாதிக்கப்படபோகிறேனோ, அல்லது நஷ்டம் ஏற்படுமோ என்ற அளவிற்கு பயப்படுவோம். அதுவே இரண்டு நாட்களுக்கு பிறகு அதற்கேற்ற வழியினை தெரிந்துகொண்டு அதனை எதிர்கொள்வதற்கு கற்றுக்கொள்வோம். அதில் இருந்து நாம் எவ்வாறு மீண்டுவந்தோம் என்று மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் அளவுக்கு அந்த விஷயம் நமக்கு உணர்த்திவிட்டு சென்றுவிடுகிறது.

    சிலநேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் எதிர்கொள்ளவே முடியாத அளவிற்கான பிரச்சினைகள் கூட வரும். அப்படி வந்தால் அதன்மூலம் நம்முடைய வாழ்க்கைமுடிகிறது என்று இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம் தான் என்றாலும் வாழ்க்கை பாடத்தில் பல பெரிய பிரச்சினைகளை கையாள கற்றுக்கொள்ளும் போது எதையுமே துணிச்சலாக செய்வதற்கும், அதன் யதார்த்தத்தை புரிந்து கொள்வதும் எளிதாக இருக்கும்.

    நம்முடைய வாழ்க்கையில் ஏன் நமக்கு மட்டும் இவ்வாறு நடக்கிறது என்று நினைத்து வாழ்வதைவிட, நமது வாழ்க்கையில் நடப்பதை ஏற்றுக்கொண்டு இது இப்படித்தான் என்று எடுத்துக்கொண்டு கடந்து செல்வதே சிறந்தது. இதையே யோசித்துக்கொண்டு இருந்தால் அதில் எந்த பலனும் இருக்காது. அதில் இருந்து நாம் எவ்வாறு மீண்டு வெளியே வருவோம் என்பதில் நம் எண்ணங்கள் தேங்கி நின்றுவிடுகிறது.

    அதனால் ஒரு கஷ்டம் வந்தால் அதை ஏற்றுக்கொண்டு அந்த கஷ்டத்தில் இருந்து எவ்வாறு வெளியேற என்ன வழி என்பதைத்தான் நினைக்க வேண்டும். அதிலும் இந்த கஷ்டமான நேரத்திலும் நமக்கு என்ன நஷ்டம் ஏற்படும் என்பதையும் தாங்கிக்கொண்டு முடிவு எடுப்பதே சிறந்தது. நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்களையும் யோசித்து பார்த்து முடிவெடுக்க வேண்டும். இதுவே நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு வழிவகுக்கும்.

    உங்களுடைய வாழ்க்கையில் மிகவும் கடுமையான சந்தர்ப்பங்களை எதிர்கொண்டு வருகிறீர்கள் என்றால் எதிர்மறை எண்ணங்களை விடுத்து இப்போதைக்கு என்ன தேவை என்பதை மட்டும் புரிந்துகொண்டு அதன்படி செல்வதே சிறந்ததாக இருக்கும். அப்போது தான் வாழ்க்கையில் இப்போது என்னென்ன விஷயங்கள் நமக்கு சந்தோசத்தை தருகிறதோ அது இந்த நிலைமையில் இருந்து கடந்து செல்வதற்கும், வாழ்கையில் அடுத்த நிலையை நாம் அடைவதற்கும் உதவி செய்யும்.

    • சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
    • புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.

    ராகு கால பூஜைக்கான மலர்கள்

    ராகு கால நேரம் என்பது வாரத்தில் அனைத்து நாட்களிலும் உண்டு.

    இதில் செவ்வாய் கிழமை மற்றும் வியாழக் கிழமைகளில் செய்யப்படும் ராகு கால பூஜை மிகவும் சிறப்பானது.

    இதைத்தவிர மற்ற நாட்களிலும் ராகு கால பூஜை செய்யலாம்.

    ஒவ்வொரு கிழமைகளில் ஒவ்வொரு விதமான மலர்களைக் கொண்டு பூஜை செய்வதால் வாழ்வில் நிம்மதியும் வளங்களும் பெருகும்.

    சூரிய கிரகத்துக்கு ஞாயிற்று கிழமைகளில் பாரிஜாதம் மற்றும் வில்வ மலர்களைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

    சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

    செவ்வாய் கிரகத்துக்கு செவ்வாய் கிழமைகளில் செவ்வரளி, செந்தாமரை மற்றும் செம்பருதி மலர் கொண்டு ராகு கால பூஜை செய்வது செவ்வாய் தோஷம் விலகும்.

    புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.

    வியாழக்கிழமைகளில் குரு கிரகத்துக்கு மஞ்சள் நிற மலர்கள் மற்றும் சாமந்தி மலர் கொண்டு பூஜை செய்யவேண்டும்.

    சுக்கிரனுக்கு வெள்ளிக் கிழமைகளில் வெள்ளை அரளி கொண்டு பூஜை செய்யலாம்.

    சனி பகவானுக்கு சனிக் கிழமைகளில் நீல நிற சங்கு மலர் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

    மேற் கண்ட ஒவ்வொரு தினத்திலும் குறிப்பிட்ட மலர்களைக் கொண்டு பூஜை செய்தால் இல்லத்தில் அமைதி மற்றும் சுபிட்சம் பெருகும்.

    • மாலை 6 மணிக்கு தீபாராதனை முடிந்ததும், 6.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும்.
    • மஞ்சள் மலர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் அபார சக்தி உண்டு.

    இறைவன் காலடியில் மலர் போடுங்கள்!

    ஒரு கூடை அரளியைச் சேகரித்துக்கொண்டு, ஒவ்வொரு நாமமாகச் சொல்லி நிதானமாக இறைவனுக்கு அர்ப்பணம் செய்து பாருங்கள்.

    அதுவும் மலர்களை சுவாமியின் மீது தூக்கி வீசாமல், அழகாக ஒவ்வொரு மலராக அலங்காரம் செய்வது போல் சுவாமி காலடியில் வைத்துப்பாருங்கள்.

    உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளும், இனம் புரியாத ஆனந்தம் உள்ளுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும்.

    நாள் முழுவதும் சந்தோஷமாகக் கழியும்.

    மஞ்சள் மலர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் அபார சக்தி உண்டு.

    அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி

    மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதும் முதலில் அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும்.

    மாலை 6 மணிக்கு தீபாராதனை முடிந்ததும், 6.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும்.

    தாமரை, செண்பகம், முல்லை, பிச்சி, அரளி, துளசி உள்பட பல்வேறு மலர்கள் புஷ்பாஞ்சலிக்கு பயன்படுத்தப்படும்.

    புஷ்பாஞ்சலி செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.8,500 செலுத்தி ரசீது பெற்று சென்றால் அவர்கள் பெயரில் அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி செய்யப்படும்.

    புஷ்பாஞ்சலிக்கு தேவையான மலர்களை பக்தர்கள் கொண்டு செல்ல வேண்டியதில்லை.

    கோவில் சார்பில் மலர்கள் பயன்படுத்தப்படும்.

    தரமற்ற பூக்கள் பூஜைக்கு பயன்படுத்துவதை தடுக்கவே இந்த ஏற்பாட்டை திருவாங்கூர் தேவசம் போர்டு செய்துள்ளது.

    ×