search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகம் பளபளக்கும்"

    • குங்குமாதி க்ரீம் முகத்துக்கு பல நன்மைகளை அளிக்கிறது.
    • 6 மாதத்திற்கு கெடாமல் இருக்கும்.

    முகம் எப்போதும் ஒளிர வேண்டும். நமது சருமத்துக்கு ஊட்டச்சத்து வேண்டும். பராமரிப்பும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த குங்குமப்பூ க்ரீமை பயன்படுத்தலாம்.

    கடைகளில் குங்குமாதி தைலம் என்று பல புராடக்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. பெயருக்கேற்றபடி இது சற்று கூடுதலான விலைதான். அதேநேரம் நாம் வீட்டிலேயே தயார்செய்யும் குங்குமாதி க்ரீம், பார்லருக்கு சென்று அழகை பராமரிக்க செய்வதை காட்டிலும் குறைந்த விலை தான். இந்த குங்குமாதி க்ரீம் முகத்துக்கு பல நன்மைகளை அளிக்கிறது. அதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கற்றாலை ஜெல்

    குங்குமப்பூ

    ஆலிவ் ஆயில்

    பாதாம் ஆயில்

    ரோஸ் வாட்டர்

    வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்

    செய்முறை:

    ஒரு சிறிய டப்பாவில் குங்குமப்பூவை போட்டு அது மூழ்கும் அளவிற்கு ரோஸ் வாட்டர் சேர்த்து 10 நிமிடத்திற்கு அப்படியே வைக்க வேண்டும். அதன்பிறகு ஒரு பாத்திரத்தில் கற்றாலை ஜெல்லை போட்டு அதில் பாதாம் ஆயில், ஆலிவ் ஆயில், சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதில் நாம் ஏற்கனவே கலந்து வைத்துள்ள குங்குமப்பூ கலவை மற்றும் வைட்டமின் ஈ எண்ணை, ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக க்ரீம் பதத்திற்கு கலக்க வேண்டும். இல்லை என்றால் பிளெண்டர் கொண்டும் பேஸ்ட் மாதிரி அடித்து எடுத்துக்கொள்ளலாம். இப்போது குங்குமாதி க்ரீம் தயார்.

    இதனை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம். 6 மாதத்திற்கு கெடாமல் இருக்கும். இதனை முகம், கை, கழுத்து என அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்தலாம்.

    முகத்தில் இறந்த செல்கள் இருக்கும் போது முகம் எப்போது மந்தமாக இருக்கும். முகத்தில் சருமத்தை பழுப்பு நிறமாக காண்பிக்கும். குங்குமாதி க்ரீம் பயன்படுத்தும் போது முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதோடு சருமத்துளைகளில் படிந்திருக்கும் அழுக்குகளையும் வெளியேற்றுகிறது.

    குங்குமாதி க்ரீம் முகத்தில் இருக்கும் சரும பிரச்சனைகளை வெளியேற்ற உதவுகிறது. சரியான முறையில் இதை பயன்படுத்தினால் நீங்கள் விரும்பும் பேரழகை பெறமுடியும்.

    ×