search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகமூடி கொள்ளையர்"

    • அரசு பள்ளி அருகே கரும்பு தோட்டம் பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வழிமறித்தனர்.
    • கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் திடீர் என ஜெய்சங்கரை தாக்கினர்.

    கடலூர்,செப்.1-

    கடலூர் அருகே உள்ள திருக்கண்டேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். (வயது 47) கார் டிரைவர். இவர் சம்பவத்தன்று சவாரிஏற்றி கொணடு காரில் விழுப்புரம் அருகே உள்ள சொர்ணாவூர் சென்றார். பின்னர் அங்கிருந்து ஊருக்கு மேல்பட்டாம்பாக்கம் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது அரசு பள்ளி அருகே கரும்பு தோட்டம் பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வழிமறித்தனர். அதிர்ச்சி அடைந்த  ஜெய்சங்கர் காரை நிறுத்தினார். அந்த கும்பல் முகமூடி அணிந்து இருந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் திடீர் எனஜெய்சங்கரை தாக்கினர். இதில் அவர் நிலை குலைந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் ஜெய்சங்கர் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ. 1000 ரொக்கபணத்தை பறித்தனர். பதறி போன ஜெய்சங்கர் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ஜெய்சங்கர் நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து தப்பிஓடிய முகமூடி கும்பலை தேடி வருகிறார்கள். 

    ×