search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவ கிராமங்கள்"

    • 2-ம் நாளான நேற்று, கபடி, கைபந்து, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
    • 11 மீனவ கிராமங்களை சேர்ந்த 11 படகுகள் பங்கேற்றன.

    புதுச்சேரி:

    காரைக்காலில் 4 நாட்கள் நடைபெறும் கார்னிவல் திருவிழா நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான நேற்று, கபடி, கைபந்து, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து கார்னிவெல்லின் ஒரு பகுதியாக மீனவ கிராமங்களுக்கிடையே படகு போட்டி நடைபெற்றது. இந்த படகு போட்டியில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு, காளி குப்பம், மண்டபத்தூர், கீழக்காசாக்குடி மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமங்களை சேர்ந்த 11 படகுகள் பங்கேற்றன. இப்போட்டியை காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் தொடங்கி வைத்தார். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட போட்டியில் முதல் இடத்தை காளிகுப்பம் மீனவர்களும், 2-ம் இடத்தை மண்டபத்தூர் மீனவர்களும், 3-ம் இடத்தை கீழக்காசாக்குடி மேடு மீனவர்களும் வெற்றி பெற்றார்கள். வெற்றி பெற்ற மீனவர்களுக்கு 18-ந் தேதி பரிசுகள் வழங்கப்படும் என கலெக்டர் முகமது மன்சூர் அறிவித்துள்ளார்.

    • வங்க கடலில் 55 கி.மி. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • இவர்கள் விசைபடகு, பைபர்படகு, கட்டுமரம் உள்ளிட்ட 5 ஆயிரம் படகு மூலம் மீன்பிடித்து வருகிறார்கள்.

    கடலூர்:

    வங்க கடலில் இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் வங்க கடலில் 55 கி.மி. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இவர்கள் விசைபடகு, பைபர்படகு, கட்டுமரம் உள்ளிட்ட 5 ஆயிரம் படகு மூலம் மீன்பிடித்து வருகிறார்கள்.

    கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. சுமார் 30 முதல் 40 அடி வரை கடல் அலை எழும்பி கரைக்கு முன்னோக்கி வருகிறது. கடல் சீற்றம் அதிகரிப்பு காரண மாக கடலூர் மாவட்ட மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். தாழங்குடா பகுதியில் படகுகளை நிறுத்துவதற்கு என்று தனியாக இடம் இல்லை. இவர்கள் கடற்கரை யோரம் படகுகளை நிறுத்தி வருகிறார்கள். கடல் சீற்றம் காரணமாக தங்களது படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு இழுத்து சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் கடல் அருகே யாரும் செல்லக்கூடாது என்றும் மீன்வளத்துறை சார்பில் அறுவுறுத்தப்பட்டுள்ளது.

    ×