search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீண்டும் இயக்க கோரிக்கை"

    • தேனி மாவட்டம் வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சியில் 20க்கும் மேற்பட்ட மலைக்கிரா மங்கள் அமைந்துள்ளது
    • அரசு பஸ் சேவையை மீண்டும் தொடங்க சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சியில் மேலபூசனூத்து, கீழபூச னூத்து, சாந்திபுரம், முத்தூத்து உட்பட 20க்கும் மேற்பட்ட மலைக்கிரா மங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, முருக்கோடை ஆகிய கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளிகளில் படித்து வரு கின்றனர்.

    வருசநாட்டில் இருந்து சிங்கராஜபுரம், பூசனூத்து வழியாக அரண்மனை ப்புதூர் வரை அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எந்தவித காரணமும் இன்றி அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டது. அதன் பின்பு மீண்டும் அரசு பஸ் சேவை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே முத்தூத்து, பூசனூத்து உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிரா மங்களை சேர்ந்த மாண வர்கள் பள்ளிக்கு செல்ல சுமார் 5 கி.மீ தொலைவில் நடந்தோ அல்லது கூடுதல் தொகை கொடுத்து ஆட்டோக்களிலோ செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு ள்ளது. இதே போல வெளியூர் செல்லும் பொதுமக்கள் பஸ்சிற்காக வருசநாடு வரை நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே சிங்கராஜபுரம் ஊராட்சியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி நிறுத்தப்பட்டுள்ள அரசு பஸ் சேவையை மீண்டும் தொடங்க சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    ×