search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிளகாய் சாகுபடி"

    • இந்தவாரம் குண்டடம் வராசந்தையில் விற்பனைக்காக அதிகளவில் மிளகாயை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
    • மிளகாய் செடி 1 ஏக்கர் சாகுபடி செய்ய விதை, நடவு கூலி, உரம், உள்ளிட்டவற்றுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்கிறோம்.

    குண்டடம்:

    குண்டடம் சுற்றுவட்டாரம் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சுற்றுவட்டார பகுதிகளான குண்டடம், ருத்ராவதி, சூரியநல்லூர், முத்தனம்பட்டி உட்பட பல கிராமங்களிலுள்ள விவசாயிகள் குறைந்த தண்ணீரை கொண்டு நிறைந்த லாபம் தரும் பயிர்களான வெங்காயம், கத்திரி, தக்காளி, மிளகாய் போன்ற பயிர்களை பயிற்செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சில நாட்களாக பெய்த பருவமழை மற்றும் பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் தண்ணீர் நல்ல முறையில் கிடைத்துள்ளதால் இப்பகுதி விவசாயிகள் அதிகளவில் மிளகாய் செடியை ரகங்களான கருங்காய், உருண்டை, சம்பா போன்ற மிளகாய் செடியை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.

    இது குறித்து குங்குமம் பாளையத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது;-

    மிளகாய் செடி 1 ஏக்கர் சாகுபடி செய்ய விதை, நடவு கூலி, உரம், உள்ளிட்டவற்றுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்கிறோம். 5 மாதம் வரை காய் பிடிக்கும். நல்ல மகசூல் கிடைத்தால் ஏக்கருக்கு 5 மாதங்களுக்கு 10 டன் வரை உற்பத்தி கிடைக்கும். 30 நாட்களில் காய் பிடிக்கத் தொடங்கும் காய் பிடித்த நாளிலிருந்து 12 நாட்களுக்கு ஒரு முறை காய்களை ஆட்கள் மூலம் கூலி கொடுத்து பறித்து குண்டடம் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரும்போது வாடகை சுங்கம், என 1 கிலோவுக்கு ரூ.10 செலவு ஆகிறது.

    வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணி வரை கூடும் இந்த சந்தைக்கு மிளகாயை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அதேபோல் மிளகாயை வாங்குவதற்க்காக கேரளா, ஊட்டி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்த வியாபரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் வந்து வாங்கிச்செல்கின்றனர். இந்தநிலையில் இந்தவாரம் குண்டடம் வராசந்தையில் விற்பனைக்காக அதிகளவில் மிளகாயை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதனால் மிளகாய் கிலோ ரூ.20க்கு விற்பனையானது. இனி வரும் மாதங்களில் விலை கூடும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×