search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாதன பராமரிப்பு பணிகள்"

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடக்கிறது
    • மின்வாரிய செயற்பொறியாளர் தகவல்

    வேலூர்:

    வேலூர் மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த வேலூர், இறைவன்காடு ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை புதிய பஸ் நிலையம், பைபாஸ் ரோடு, தோட்டப்பாளையம், பழைய பஸ் நிலையம், வேலூர் டவுன் பஜார், சலவன்பேட்டை, அண்ணாசாலை, அப்துல்லாபுரம், கிருஷ்ணாநகர், பிஷப்டேவிட்நகர், கஸ்பா, ஊசூர், கொணவட்டம், சேண்பாக்கம் மற்றும் விருதம்பட்டு, செங்காநத்தம் ரோடு, கொசப்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும். வல்லண்டராமம், விரிஞ்சிபுரம், இறைவன்காடு, செதுவாலை, கந்தனேரி, மருதவல்லிபாளையம், அன்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    இந்த தகவலை செயற்பொறியாளர் ஆரோக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

    ×