search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் மாற்றிகள்"

    • பொறையாறு அருகே 2 புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டது
    • பொது மக்கள் பயன்பாட்டிற்காக மின்மாற்றிகள் திறந்து வைக்கப்பட்டது.

    மயிலாடுதுறை:

    தரங்கம்பாடி தாலுகா பொறையாறு அருகே காட்டுச்சேரி மற்றும் எடுத்துக்கட்டி சாத்தனூர் ஆகிய ஊராட்சிகளில் புதிய மின் மாற்றிகள் தொடக்க விழா நடந்தது.

    விழாவுக்கு மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

    செம்பனார்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அப்துல் வஹாப் மரைக்காயர் முன்னிலை வகித்தார். பொறையாறு உதவி மின் பொறியாளர் அன்புசெல்வன், வரவேறறார்.

    இதில் மயிலாடுதுறை ராமலிங்கம்,எம்.பி, நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இரு மின்மாற்றிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தனர்.

    விழாவில் செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், முன்னாள் எம்.எல்.ஏ. சித்திக், ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • குளித்தலை பகுதிகளில் 7 இடங்களில் புதிய மின் மாற்றிகள் தொடங்கப்பட்டுள்ளது
    • எம்.எல்.ஏ. இரா.மாணிக்கம் தொடங்கி வைத்தார்

    குளித்தலை,

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரம் ஊராட்சிக்குட்பட்ட தண்ணீர்பள்ளி, கருங்களாப்பள்ளி, ஈச்சம்பள்ளம், கூடலூர் பாலம், சூரியனூர், கவுண்டம்பட்டி ஆகிய 7 இடங்களில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமை வகித்து புதிய மின்மாற்றுகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தியாகராஜன், குளித்தலை மின்வாரிய செயற்பொறியாளர் (பொ) ஆனந்த், உதவி செயற்பொறியாளர் பாலகுமார், உதவி பொறியாளர் நடராஜன், நங்கவரம் பேரூராட்சி துணைத் தலைவர் அன்பழகன், இராஜேந்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ரெத்தினவள்ளி சண்முகம், மின்வாரிய அலுவலர் கோபால், பரளி செந்தில் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×