search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் தடையை கண்டித்து"

    • மின் தடையை கண்டித்து சக்தி- பண்ணாரி சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புதுப்பீர்கடவு பகுதி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் மின் பழுது ஏற்பட்டு மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் இப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் மின் தடையை கண்டித்து ராஜன் நகர் பவர் ஹவுஸ் எதிரே உள்ள சக்தி- பண்ணாரி சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பவானிசாகர் போலீசார், ராஜன் நகர் பஞ்சாயத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது மக்கள் 25 நாட்களாக மின்தடையால் கடும் அவதி அடைந்து வருவதாகவும், உடனடியாக மின்பழுதை சரி செய்து சீரான மின் விநியோகம் வழங்க வேண்டும் என்று கூறினர்.

    இதனையடுத்து அதிகாரிகள் உடனடியாக உங்கள் பகுதியில் மின் பழுது சரி செய்யப்பட்டு மின் விநியோகம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதனை ஏற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். சுமார் 30 நிமிடம் போராட்டத்திற்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து தொடங்கியது.

    ×