என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மினிமாரத்தான் ஓட்டம்"
- சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
- திண்டுக்கல்லில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்செஸ் ஒலிம்பியாட் மினிமாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
திண்டுக்கல்:
சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 188 உலக நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினந்தோறும் பல்வேறு நிகழச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்ஒருபகுதியாக இன்று செஸ் ஒலிம்பியாட் மினிமாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த பேரணியில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு ஓட்டத்தினை கலெக்டர் விசாகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி, எம்.எஸ்.பி பள்ளி உதவி தலைமைஆசிரியர் துரைராஜ், திண்டுக்கல் மாவட்ட சதுரங்க கழக செயலாளர் அப்துல்நாசர் மற்றும் உடற்கல்வி பயிற்றுனர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் தங்கள் முகத்தில் சதுரங்க பலகையின் வடிவத்தை குறிப்பிடும் வகையில் உருவம் வரைந்து கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்