என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மினிபஸ் மோதல்
நீங்கள் தேடியது "மினிபஸ் மோதல்"
வடுவூர் அருகே சைக்கிளில் சென்ற ஓட்டல் தொழிலாளி மினிபஸ் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
வடுவூர்:
திருவாரூர் மாவட்டம் வடுவூர் வடபாதி அருகே உள்ள கொண்டையூரை சேர்ந்தவர் குணசேகரன். (வயது 58.) இவர் வடுவூரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். நேற்று குணசேகரன் வடுவூர் கோதண்டராமர் கோவிலின் பின்புறமுள்ள குளத்தின் வழியாக சைக்கிளில் சென்றார். இவர் மெயின்ரோட்டை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மினிபஸ் குணசேகரன் மீது மோதியது. அப்போது சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அவர் மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் உடல் நசுங்கி குணசேகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினிபஸ் டிரைவர் காரக்கோட்டையை சேர்ந்த சபரிநாதன் (22) என்பவரை கைது செய்தனர். குணசேகரனின் உடல் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மினிபஸ் சக்கரத்தில் சிக்கி ஓட்டல் தொழிலாளி இறந்த சம்பவம் கொண்டையூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X