என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாவட்ட தலைவர் கைது"
- எர்ணாகுப்பம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் கோதண்டன் என்பவர் நடத்தி வருகிறார்.
- கோதண்டன் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள வேம்பேடு கிராமத்தில் அரசு அனுமதியுடன் சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. இதனை எர்ணாகுப்பம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் கோதண்டன் என்பவர் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் மண் குவாரிக்கு கீழானூரை சேர்ந்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட பகுஜன்சமாஜ் கட்சியின் தலைவர் பிரேம்குமார் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கோதண்டன் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இன்று அதிகாலை பகுஜன் சமாஜ்கட்சியின் மாவட்ட தலைவர் பிரேம்குமாரை அதிரடியாக கைது செய்தனர். இவரது மனைவி கீழானூர் ஊராட்சி தலைவியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பகுஜன்சமாஜ் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாவட்ட தலைவர் கைதுக்கு கண்டனம் தெரிவித்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
- தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை சமரசப்படுத்தினர்.
கடலூர்:
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கடலூர் மாவட்ட தலைவர் பயாஸ் அகமதுவை தேசிய குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் காட்டுமன்னார்கோவிலில் கைது செய்தனர். இந்த தகவல் காட்டுமன்னார்கோவில் மற்றும் லால்பேட்டை பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஒன்று திரண்டனர்.
அவர்கள் பயஸ் அகமதுவை கைதுசெய்த அதிகாரிகளை கண்டித்து லால்பேட்டையில் சிதம்பரம் செல்லும் சாலையில் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு விைரந்து சென்று அவர்களை சமரசப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்