search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாயமான மீனவர்"

    • கடந்த 14-ந் தேதி இரவில் ராக்கப்பன் என்பவர் படகை இயக்கினார். மற்ற மீனவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்
    • மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தை சேர்ந்தவர் டிட்டோ. இவருக்கு சொந்தமான விசைப் படகு மூலம் கடந்த 5-ந் தேதி, 10 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    கடந்த 14-ந் தேதி இரவில் ராக்கப்பன் என்பவர் படகை இயக்கினார். மற்ற மீனவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது படகு திசை மாறி செல்வதை அவர்கள் உணர்ந்தனர். உடனடியாக திடுக்கிட்டு எழுந்து பார்த்த போது, ராக்கப்பனை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், நங்கூ ரமிட்டு படகை நிறுத்தினர். பின்னர் ராக்கப்பனை படகு மற்றும் கடலுக்குள் தேடினர். இதுகுறித்து குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நேற்று தேங்காய் பட்ட ணம் துறைமுகத்துக்கு வந்த விசைப்படகு மீனவர்கள், ஆழ்கடலில் மாயமான மீனவர் ராக்கப்பனை கண்டு பிடிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதனை தொடர்ந்து மீனவர் ராக்கப்பனை தேடும் பணி 5-வது நாளாக இன்று நடைபெற்றது.

    • ஆளில்லாமல் ஒரு வள்ளம் கடலில் தனியாக மிதப்பதை பார்த்தனர்.
    • விசைப்படகுகளில் சென்று மரியதாசனை தேடும் பணியில் ஈடுபட்டனர்

    கன்னியாகுமரி :

    குமரி மேற்கு கடற்கரை யோர பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் கடந்த 1-ம் தேதி முதல் தொடங்கி உள்ளது. இதனால் விசைப் படகுகள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன் பிடித்து வருகின்றன. நேற்று காலை அழிக்கால் மீனவர்கள் வள்ளத்தில் மீன் பிடிக்க சென்ற போது, ஆளில்லாமல் ஒரு வள்ளம் கடலில் தனியாக மிதப்பதை பார்த்தனர். அதனை மீட்டு முட்டம் மீன் பிடித்துறை முகத்தில் கொண்டு வந்து சேர்த்தனர்.

    தனியாக மிதந்த வள்ளத்தில் மீன் பிடிக்க சென்ற மீனவர் யார்?அவர் தவறி கடலில் விழுந்தா ரா?அவர் கதி என்ன? என்று மீனவர்கள் துப்பு துலக்கினர். இதற்கிடையே தகவலறிந்து குளச்சல் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னார்.

    விசாரணையில் தனியாக மிதந்த வள்ளம் முட்டம் ஓடைத்தெருவை சேர்ந்த மரியதாசன் (வயது 57) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. மீன் பிடிக்க சென்ற அவர் கரை திரும்பவில்லை என்றும், அவர் வள்ளத்திலிருந்து தவறி விழுந்து இருக்கலாம் என்றும் கருதப்பட்டது.

    இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள், வள்ளம், விசைப்படகுகளில் சென்று மரியதாசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று நாள் முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருட்டி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

    இன்று காலை அவர்கள் 2-வது நாளாக மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்ட னர். வள்ளத்திலிருந்து மீனவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாயமான மீனவர் மரியதாசனுக்கு பிரபா (48) என்ற மனைவியும், 3 மகள் களும் உள்ளனர்.

    • கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இந்த பகுதி யில் 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலியாகி உள்ளனர்.
    • அவரது கதி என்னவென்று தெரிய வில்லை. மீனவர் மாயமாகி உள்ளதால் அவரது குடும்பத் தினர் மிகவும் சோகம்

    நாகர்கோவில் :

    தேங்காய் பட்டணம் துறைமுக முகப்பு பகுதியில் அடிக்கடி படகுகள் கவிழ்ந்து விபத்துக்கள் நடக்கும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இந்த பகுதி யில் 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலியாகி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பூத்துறையைச் சேர்ந்த சைமன் என்ற மீனவர் படகு கவிழ்ந்து பலியானார்.இதையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    துறைமுக முகத்துவா ரத்தில் உள்ள மணலை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரி போராட்டம் செய்தனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மீன்வ ளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள்.

    இந்த பிரச்சனை தொடர் பாக விஜய்வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தும் வலி யுறுத்தினார்கள். துறைமுக முகத்துவாரத்தில் உள்ள மணலை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து இருந் தார்.

    இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தொடங்கினார்கள்.இந்த நிலையில் நேற்று மீண்டும் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் மாயமாகியுள்ளார்.இணையம் புத்தன் துறையைச் சேர்ந்த வர் அமல்ராஜ் (வயது 67). இவர் நேற்று காலை இன்ஜின் இல்லாத சிறிய பைபர் படகு ஒன்றில் தேங்காய்பட்டணம் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். மதியம் கரை திரும்பிக் கொண்டிருந்த போது தேங்காய்பட்டணம் துறைமுகத்தின் முகத்துவார பகுதியில் வந்தபோது மணல்திட்டில் படகு சிக்கி கவிழ்ந்தது.

    இதில் அமல்ராஜ் கடலுக்குள் விழுந்து தத்தளித்தார். அப்போது அந்த வழியாக படகில் வந்த மீனவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் ராட்சத அலை அமல்ராஜை மூழ்கடித்தது.இதைத் தொடர்ந்து மீனவர்கள் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அமல்ராஜ் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.கட லோர காவல் படை போலீ சாரும் மீனவர் களும் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டதை தொடர்ந்து தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக தேடும் பணி நடந்து வருகிறது. ஆனால் அமல்ராஜ் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதனால் அவரது கதி என்னவென்று தெரிய வில்லை. மீனவர் மாயமாகி உள்ளதால் அவரது குடும்பத்தினர் மிகவும் சோகத்தில் உள்ளனர்.

    ×