search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாப்பிள்ளை விநாயகர் கோவில்"

    • ராஜபாளையத்தில் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவில் நற்பணி மன்றம் சார்பில் முடங்கியார் ரோட்டில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
    • அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவில் நற்பணி மன்றம் சார்பில் முடங்கியார் ரோட்டில் சுதந்திர தின விழா நடைபெற்றது. மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் தலைமை தாங்கினார். பண்ணையார் ஆர்ச் என்று அழைக்கப்படும் சுதந்திர தின நினைவு வளைவில் தேசியக்கொடியை தீயணைப்பு நிலைய அதிகாரி ஸ்ரீனிவாசன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் என்.சி.எம். ராதாகிருஷ்ணராஜா, கணேஷராஜா,முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் தேசிங்குராஜா ராஜூக்கள் கல்லூரி என்.சி.சி மாணவர்கள், மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது

    ×