என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாதிரித் தேர்வு"
- மைய நூலகத்தில் குரூப்-4 மாதிரித் தேர்வு நடைபெற உள்ளது.
- ஓஎம்ஆர் தேர்வுத்தாளில் நடத்தப்படுகிறது.
கரூர்:
கரூர் மாவட்ட மைய நூலகத்தில் 16, 17ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முழு மாதிரித்தேர்வு நடைபெறுவதாக மாவட்ட மைய நூலகர் செ.செ.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுகள் நடைபெற உள்ளது. கரூர் மாவட்ட நிர்வாகத்தின் கலங்கரை விளக்கம் திட்டத்தின் கீழ், இத்தேர்வுக்கான முழு மாதிரித்தேர்வு கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நாளை (16-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (17-ந் தேதி) ஆகிய இரு நாட்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கொள்குறி முறையில் ஓஎம்ஆர் தேர்வுத்தாளில் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் கரூர் மாவட்ட மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் கரூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடத்தப்படும் மாதிரித் தேர்வுகளில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்