search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணிக்க குருபூஜை விழா"

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
    • தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கட்டுவதற்கு முன்பே கட்டப்பட்ட கோவில்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில்ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தாகும்.

    தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கட்டுவதற்கு முன்பே இந்த கோவிலை கட்டி உள்ளதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இங்கு குகன் என்ற முருகக் கடவுள் ஈஸ்வரன் என்றசிவனை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வர காரணம் ஆயிற்று.

    இந்த கோவிலில் மூலஸ்தானத்தில் அமைந்துஉள்ள சிவலிங்கசிலை 5½ அடி உயரம் கொண்டதாகும். இந்த கோவிலில் மாணிக்கவாச கர்குருபூஜை விழா நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு நடராஜபெருமான், சிவகாமி அம்பாள், காரைக்கால்அம்மையார் மற்றும் மாணிக்க வாசகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    எண்ணெய், பால், தயிர், நெய், களபம், சந்தனம், விபூதி, தேன், பஞ்சாமிர்தம் புனித நீரால் இந்த சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

    பின்னர் 10.45 மணிக்கு அலங்கார தீபாரதனை நடந்தது. அதன் பிறகு மாணிக்கவாசகர் உற்சவர் சிலையை தாம்பாள தட்டில் மலர்களால் அலங்கரித்து வைத்து கோவில் அர்ச்சகர் ராஜாமணி அய்யர் கையில் ஏந்தி கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் 11 மணிக்கு பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்குதலும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.

    ×