என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குகநாதீஸ்வரர் கோவில்"
- 100 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட அன்னத்தால் அபிஷேகம் நடந்தது
- 12 அலங்கார சோடஷ தீபாராதனையும் அதைத்தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடந்தது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும்.
தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டி உள்ளார். இங்கு குகன் என்ற முருகக் கடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை வழிபட்ட தால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வரக் காரணமாயிற்று.
இந்த கோவிலின் மூலஸ்தானத்தில் அமைந்து உள்ள சிவலிங்கம், குமரி மாவட்டத்தில் மிக உயர மான 5 1/2 அடி உயரமான சிலை ஆகும். அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று மூலவரான குக நாதீஸ்வரருக்கு அன்னாபி ஷேகம் நடை பெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் ஐப்பசி பவுர்ணமி யான இன்று இந்த கோவிலில் உள்ள மூலவரான குகநாதீஸ்வ ரருக்கு அன்னா பிஷேகம் நடந்தது. இதையொட்டி இன்று காலையில் அபிஷேகமும் அதைத்தொடர்ந்து தீபாராதனையும்நடந்தது.
பின்னர்எண்ணை,பால்,பன்னீர்,இளநீர்,தயிர்,தேன் சந்தனம்,விபூதி,பஞ்சாமிர்தம்மற்றும் புனிதநீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின்னர் மூலவரான குகநாதீஸ்வரருக்கு100 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட அன்னத்தால் அன்னாபி ஷேகம் நடந்தது.
மதியம் 12 அலங்கார சோடஷ தீபாராதனையும் அதைத்தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வ ரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.
- 6-ந்தேதி நடக்கிறது
- கன்னியாகுமரி குக நாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி குகநாதீ ஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்தி ரத்தன்று 1008 சங்காபி ஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திர தினமான வருகிற 6-ந்தேதி காலை 10.30 மணிக்கு குகநாதீஸ்வர பெருமானுக்கு 1008 சங்காபிஷேகமும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாரதனையும், 12.30 மணிக்கு வாகன பவனியும் நடக்கிறது. பலவண்ண மலர்களால் அலங்கரி க்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜ பெருமானும், சிவகாமி அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேளதாளங்கள் முழங்க வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு 1 மணிக்கு பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுளை கன்னியாகுமரி குக நாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகிறார்கள்.
- சிவபெருமானின் திருவிளையாடல் லீலைகளை சித்தரிக்கும் காட்சிகளை பார்த்து பக்தர்கள் பரவசம்
- 3 முறைவலம் வந்து திருவிளையாடல் காட்சிகளை சித்தரிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரிரெயில் நிலையசந்திப்பில் அமைந்து உள்ள குகநாதீஸ்வ ரர்கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் ஆவணி மூலதிருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான ஆவணி மூல திருவிழாகடந்த 19-ந்தேதிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவின் போது ஒவ்வொரு நாட்களும் இரவு 7மணிக்கு சிவபெருமானின் திருவிளையாடல் லீலைகளை சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இதனை பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர். அப்போது தட்டுவாகனத்தில் சிவபெருமான் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க 3முறைவலம்வந்து திருவிளையாடல் காட்சிகளை சித்தரிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
6-ம் திருவிழாவான இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நால்வர் திருவிழா நடக்கிறது. அப்போது பல வண்ண மலர்களால் அலங்க ரிக்கப்பட்ட வாகனத் தில் சிவபெருமானுடன் நாயன்மார்களான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர்ஆகிய 4 நாயன்மார்களும் எழுந்தருளி மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி 3முறை வலம் வந்து பானனுக்கு அங்கம் வெட்டியகாட்சி நடக்கிறது.
ஆவணி மூலத் திருவிழா நிறைவு பெறுவதையொட்டி 29-ந்தேதி காலையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகிறார்கள்.
- 100 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட அன்னத்தால் அபிஷேகம் நடந்தது
- கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமிஅன்று மூலவரான குகநாதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் ஐப்பசி பவுர்ணமியான இன்று குகநாதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இதையொட்டி இன்று காலையில் அபிஷேகமும் அதைத்தொடர்ந்து தீபாராதனையும்நடந்தது.பின்னர்எண்ணை, பால், பன்னீர், இளநீர், தயிர், தேன் சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம்மற்றும் புனிதநீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதன்பின்னர் மூலவரான குகநாதீஸ்வர ருக்கு100 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட அன்னத்தால் அன்னாபிஷேகம் நடந்தது. மதியம் 12 மணிக்கு அலங்கார ஷோடஷ தீபாராதனையும் அதைத்தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.
- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திர தினமான இன்று காலை 1008 சங்காபிஷேகம் நடந்தது.இதையொட்டி காலை கணபதி ஹோமமும், அதைத்தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது.
பின்னர் தொடர்ந்து சங்குபூஜை நடந்தது. அப்போது சிவபெருமானின் பஞ்சலோக முக கவசம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அதன் முன்னால் நெல் மற்றும் மலர்கள் பரப்பி அதன் மேலே 1008 வலம்புரி சங்குகளை சிவலிங்க வடிவில் வடிவமைத்து இருந்தது. அந்த சங்குகளில் புனித நீர் நிரப்பி பூஜை நடத்தப்பட்டது.
கோவில் தலைமை அர்ச்சகர் ராஜாமணி அய்யர் மற்றும் சிவாச்சாரியர்கள் இந்த சங்கு பூஜையை நடத்தினர். பின்னர் குகநாதீஸ்வர பெருமானுக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து மதியம் அலங்கார தீபாராதனையும், வாகன பவனியும் நடந்தது.
பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜபெருமானும், சிவகாமி அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.
- மூலஸ்தானத்தில் 5½ அடி உயரத்தில் லிங்க வடிவத்தில் குகநாதீஸ்வரர் காட்சியளிக்கிறார்.
- ஆடி கிருத்திகை விழா இன்று கொண்டாடப்படுகிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கட்டுவதற்கு முன்பே இந்த கோவிலைகட்டி உள்ளார் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
இங்கு குகன் என்ற முருகடவுள் சிவன் என்ற ஈஸ்வரனை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வர காரணமாயிற்று. இங்கு உள்ள மூலஸ்தானத்தில் 5½ அடி உயரத்தில் லிங்க வடிவத்தில் குகநாதீஸ்வரர் காட்சியளிக்கிறார். அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி எழுந்த ருளியுள்ள சன்னதியும் அமைந்து உள்ளது. இங்கு ஆடி கிருத்திகை விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சாஸ்தா சன்னதியில் இருந்து பக்தர்கள் தோளில் காவடி எடுத்து கோவிலை சுற்றி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். பின்னர் காலை 11 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி உள்ள சுப்பிரமணிசாமிக்கு எண்ணெய், பால் தயிர், நெய், விபூதி, சந்தனம், மஞ்சள் பொடி, இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும்புனிதநீரால்சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின்னர் 11.30 மணிக்கு அலங்கார தீபாரதனையும் பகல் 12 மணிக்கு பல வண்ணமலர்களால் அல ங்கரிக்கப்பட்ட மயில் வாக னத்தில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை யுடன் எழுந்தருளி மேளதா ளங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு மதியம் 12.30 மணிக்கு பக்தர்களுக்கு அருட் பிர சாதம் வழங்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்துஇருந்தனர்.
- மாங்கனி திருவிழா13-ந் தேதி நடக்கிறது
- விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
சிவபெருமானால் புனிதவதி என்று அழைக்கப் பட்டவர் காரைக்கால் அம்மையார். 63 நாயன் மார்களில் ஒருவராக போற்றப்படும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக் காலில் தனி சன்னதி உண்டு. அதேபோல கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலிலும் காரைக்கால் அம்மையருக்கு என்று தனி சன்னதி உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் பவுர்ணமி நாளில் காரைக்கால் அம்மையாருக்கு சிவ பெருமான் மாங்கனி அளித்ததை நினைவூட்டும் விதமாக மாங்கனி திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். அதேபோல இந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான மாங்கனி திருவிழா ஆனி மாத பவுர்ணமி யான வருகிற 13-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று மாலை 5.30 மணிக்கு மூலவரான 5½ அடி உயரமுள்ள குகநாதீஸ்வ ரருக்கு சிறப்புஅபிஷேகம் நடக்கிறது. பின்னர் 6.45 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு மாங்கனி திருவிழா நடக்கிறது.
இதையொட்டி சிவபெரு மான் பிச்சாண்டவர் கோலத்தில் சப்பர வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளி பிரகாரத்தை சுற்றி மேளதாளங்கள் முழங்க வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்னர் காரைக்கால் அம்மையார் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தட்டு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றிபவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
அப்போது திரளான பக்தர்கள்கூடை கூடையாக மாம்பழங்களை காரைக்கால் அம்மையாருக்கு படைத்து வழிபடுகின்றனர். அதன் பிறகு மாங்கனிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதற் கான ஏற்பாடுகளை கன்னி யாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேர வையினர் செய்து வருகிறார் கள்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
- தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கட்டுவதற்கு முன்பே கட்டப்பட்ட கோவில்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில்ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தாகும்.
தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கட்டுவதற்கு முன்பே இந்த கோவிலை கட்டி உள்ளதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இங்கு குகன் என்ற முருகக் கடவுள் ஈஸ்வரன் என்றசிவனை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வர காரணம் ஆயிற்று.
இந்த கோவிலில் மூலஸ்தானத்தில் அமைந்துஉள்ள சிவலிங்கசிலை 5½ அடி உயரம் கொண்டதாகும். இந்த கோவிலில் மாணிக்கவாச கர்குருபூஜை விழா நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு நடராஜபெருமான், சிவகாமி அம்பாள், காரைக்கால்அம்மையார் மற்றும் மாணிக்க வாசகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
எண்ணெய், பால், தயிர், நெய், களபம், சந்தனம், விபூதி, தேன், பஞ்சாமிர்தம் புனித நீரால் இந்த சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
பின்னர் 10.45 மணிக்கு அலங்கார தீபாரதனை நடந்தது. அதன் பிறகு மாணிக்கவாசகர் உற்சவர் சிலையை தாம்பாள தட்டில் மலர்களால் அலங்கரித்து வைத்து கோவில் அர்ச்சகர் ராஜாமணி அய்யர் கையில் ஏந்தி கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் 11 மணிக்கு பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்குதலும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.
- நாளை மறுநாள் நடக்கிறது
- கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவில் 1000 ஆண்டுகளுக்குமுந்தைய பழமையான கோவில் ஆகும். தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டிஉள்ளதாக வரலாற்றுச் சான்றுகள்கூறுகின்றன.
குகன் என்ற முருக கடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை இங்கு வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வர காரணம் ஆயிற்று.
இங்கு உள்ள மூலவரான குகநாதீஸ்வரர் மிக உயரமான 5½ அடி உயர சிவலிங்க வடிவத்தில் காட்சியளிக்கிறார். அப்படிப்பட்ட புகழ்பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று ஆனி திருமஞ்சன விழா கோலா கலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேபோல இந்த ஆண்டு ஆனி திருமஞ்சன விழா நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) நடக்கி றது.
இதையொட்டி நாளை மறுநாள் காலை 9 மணிக்கு நடராஜபெருமானுக்கும் சிவகாமி அம்பாளுக்கும்சி றப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர்9-45மணிக்கு வாகன பவனிநடக்கிறது.
பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜ பெருமானும் சிவகாமி அம்பாளும் எழுந்தருளி மேளதாளங்கள்முழங்க கோவிலை சுற்றிவலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
அதன் பின்னர் பகல் 12மணிக்கு பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநா தீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவை யினர் செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்