என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாங்கனி திருவிழா"

    • பிச்சாண்டவர் ஊர்வலம் மற்றும் மாங்கனி இறைப்பு நிகழ்ச்சி இன்று காலை கோலாகாலமாக தொடங்கியது.
    • மாங்கனிகளை திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் பிடித்து சென்றனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் பாரதியார் வீதியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாங்கனித்திருவிழா கடந்த 8-ந்தேதி மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.

    மாங்கனித்திருவிழாவின் 2-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காரைக்கால் அம்மையார் கோவில் மண்டபத்தில், காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன், நாஜிம் எம்.எல்.ஏ., புதுச்சேரி டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம், காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி சவுஜன்யா, தி.மு.க. விவசாய பிரிவு அமைப்பாளர் பிரபு என்கிற பிரித்திவிராஜ், ஆலய நிர்வாக அதிகாரி காளிதாசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் 3-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக பிச்சாண்டவர் ஊர்வலம் மற்றும் மாங்கனி இறைப்பு நிகழ்ச்சி இன்று காலை கோலாகாலமாக தொடங்கியது. காலை 9 மணிக்கு மேல் கைலாசநாதர் கோவில் எதிரில், பவளக்கால் சப்பரத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதி உலா புறப்பட்டார். அது சமயம் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொறுத்து வீட்டு வாசல், மாடி மற்றும் சாலையில் இரு புறங்களிலிருந்து மாங்கனிகளை பக்தர்கள் மீது வீசி எறிந்தனர்.

    அந்த மாங்கனிகளை திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் பிடித்து சென்றனர். இந்த மாங்கனிகளை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் ஏராளமான பெண்களும் விழாவில் கலந்து கொண்டு மாங்கனிகளை பிடித்து சென்றனர். தொடர்ந்து, பவளக்கால் சப்பரம் காரைக்கால் பெருமாள் வீதி, பாரதியார் வீதி, கென்னடியார் வீதி, மாதா கோவில் வீதி, லெமேர் வீதி வழியாக சென்று மீண்டும் பாரதியார் வீதி வழியாக இரவு காரைக்கால் அம்மையார் கோவிலை சென்றடைவார்.

    விழாவில் வீதியெங்கும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனி, பட்டு வஸ்திரங்களோடு பிச்சாண்டவருக்கு படைத்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து சென்று, அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், ஆலய நிர்வாக அதிகாரி காளிதாசன் மற்றும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • திரளான பெண் பக்தர்கள் கையில் மாங்கனி தட்டு ஏந்தி காரைக்கால் அம்மையாருக்கு வழிபாடு
    • சப்பர வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தை சுற்றி மேளதாளங்கள் முழங்க வலம் வந்த நிகழ்ச்சி

    கன்னியாகுமரி :

    சிவபெருமானால் புனிதவதி என்று அழைக்கப் பட்டவர் காரைக்கால் அம்மையார். 63 நாயன்மார் களில் ஒருவராக போற்றப் படும் காரைக்கால் அம்மை யாருக்கு காரைக்காலில் தனி சன்னதி உண்டு.

    அதேபோல கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ் வரர் கோவிலிலும் காரைக் கால் அம்மையருக்கு என்று தனி சன்னதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் பௌர்ணமி நாளில் காரைக்கால் அம்மையாருக்கு சிவபெருமான் மாங்கனி அளித்ததை நினை வூட்டும் விதமாக மாங்கனி திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம்.

    அதேபோல இந்த கோவி லில் இந்த ஆண்டுக்கான மாங்கனி திருவிழா ஆனி மாத பௌர்ணமியான நேற்று இரவு நடந்தது. இதையொட்டி மாலை 5.30 மணிக்கு மூலவரான 5½ அடி உயரமுள்ள குகநாதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    பின்னர் 6.45 மணிக்கு தீபாராதனை நடந்தது.இரவு 7 மணிக்கு மாங்கனி திருவிழா நடந்தது. இதையொட்டி சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் சப்பர வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தை சுற்றி மேளதாளங்கள் முழங்க வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.

    அதன் பின்னர் காரைக் கால் அம்மையார் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தட்டு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.

    அப்போது திரளான பெண் பக்தர்கள் தாம்பாள தட்டுகளில் மாம்பழங்களை ஏந்தியபடி காரைக்கால் அம்மையார் எழுந்தருளி இருந்த வாகனத்தின் முன்னால் இருபுறமும் ஊர்வலமாக அணி வகுத்து சென்றனர். அதன்பிறகு பெண் பக்தர்கள் தாங்கள் தாம்பாள தட்டுகளில் குவித்து வைத்திருந்த மாம்ப ழங்களை காரைக்கால் அம்மையாருக்கு படைத்து வழிபட்டனர். அதன் பிறகு மாங்கனிகள் பக்தர் களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.

    • மாங்கனி திருவிழா13-ந் தேதி நடக்கிறது
    • விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    சிவபெருமானால் புனிதவதி என்று அழைக்கப் பட்டவர் காரைக்கால் அம்மையார். 63 நாயன் மார்களில் ஒருவராக போற்றப்படும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக் காலில் தனி சன்னதி உண்டு. அதேபோல கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலிலும் காரைக்கால் அம்மையருக்கு என்று தனி சன்னதி உள்ளது.

    இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் பவுர்ணமி நாளில் காரைக்கால் அம்மையாருக்கு சிவ பெருமான் மாங்கனி அளித்ததை நினைவூட்டும் விதமாக மாங்கனி திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். அதேபோல இந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான மாங்கனி திருவிழா ஆனி மாத பவுர்ணமி யான வருகிற 13-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று மாலை 5.30 மணிக்கு மூலவரான 5½ அடி உயரமுள்ள குகநாதீஸ்வ ரருக்கு சிறப்புஅபிஷேகம் நடக்கிறது. பின்னர் 6.45 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு மாங்கனி திருவிழா நடக்கிறது.

    இதையொட்டி சிவபெரு மான் பிச்சாண்டவர் கோலத்தில் சப்பர வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளி பிரகாரத்தை சுற்றி மேளதாளங்கள் முழங்க வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்னர் காரைக்கால் அம்மையார் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தட்டு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றிபவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அப்போது திரளான பக்தர்கள்கூடை கூடையாக மாம்பழங்களை காரைக்கால் அம்மையாருக்கு படைத்து வழிபடுகின்றனர். அதன் பிறகு மாங்கனிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதற் கான ஏற்பாடுகளை கன்னி யாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேர வையினர் செய்து வருகிறார் கள்.

    ×