search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிக்கு பாலியல்"

    • 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயதுடைய சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்த சிறுமி சம்பவத்தன்று தனியாக இருந்தார். அப்போது எதிர்வீட்டில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் ஆசைபாண்டி(வயது68) என்பவர் சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி மறைவான இடத்திற்கு அழைத்து சென்றதாக தெரிகிறது.

    பின்னர் அந்த சிறுமிக்கு ஆசைபாண்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை அவரது பாட்டியிடம் அழுதுக் கொண்டே கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பாட்டி இதுகுறித்து அம்மாபட்டி போலீசில் புகார் செய்தார்.

    ோலீசார் விசாரணை நடத்தியதில் ஆசைபாண்டி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆசைபாண்டியை கைது செய்தனர்.

    ×