search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் சேர்க்கை அறிவிப்பு"

    • இந்தப்பள்ளியில் 2024-2025- ம் கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பு மற்றும் 9- ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
    • 6 மற்றும் 9-ம் வகுப்பில் பெண்களுக்கான சேர்க்கையும் நடைபெற உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதியில் சைனிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் 2024-2025- ம் கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பு மற்றும் 9- ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான அகில இந்திய சைனிக் பள்ளிகளின் நுழைவுத்தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 7-ம் தேதி முதல் தொடங்கி உள்ளது. விண்ணப்பதாரர்கள் https://aissee.nta.nic.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை அடுத்த மாதம் 16- ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 6 மற்றும் 9-ம் வகுப்பில் பெண்களுக்கான சேர்க்கையும் நடைபெற உள்ளது. 6-ம் வகுப்பில் சேரும் விண்ணப்பதாரர் 31.03.2024 அன்று 10 முதல் 12 வயதுக்குள் இருக்க வேண்டும். 9-ம் வகுப்பில் சேரும் விண்ணப்பதாரர் 31.03.2024 அன்று 13 முதல் 15 வயதுக்குள் இருக்க வேண்டும். சேர்க்கையின் போது அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் இருந்து 8- ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் இது குறித்த முழுமையான விவரங்களை nta.ac.in ; https://exams.nta.ac.in/AISSEE/ என்ற இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

    • காந்திகிராம பல்கலைக்கழகத்தின் இளங்கலை முதுநிலை படிப்புகள் தவிர்த்த பிற வகுப்புகளுக்கான சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    • இணையதளம் மூலம் ஜூன் 9ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சின்னாளபட்டி:

    காந்திகிராம பல்கலைக்கழகத்தின் இளங்கலை முதுநிலை படிப்புகள் தவிர்த்த பிற வகுப்புகளுக்கான சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    அந்த அறிவிப்பில் பல்கலைக்கழகத்தின் இளங்கலை முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான 2023-24 ம் ஆண்டிற்கான சேர்க்கை கியூட் பொதுநுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது.

    பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும் பிற படிப்புகளான முதுநிலை டிப்ளமோ, பி.வி.ஓ.சி., டி.வி.ஓ.சி. சான்றிதழ் நிலை படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது. சேர விருப்பம் உள்ளவர்கள் பல்கலைக்கழக இணையதளம் மூலம் ஜூன் 9ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×