search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் கடன்"

    • $430 பில்லியன் டாலர் கடனை பைடன் ரத்து செய்ததை உச்ச நீதிமன்றம் தடுத்தது
    • இதுவரை $138 பில்லியன் மதிப்பிலான மாணவர் கடனை பைடன் ரத்து செய்துள்ளார்

    அமெரிக்காவில் மாணவர்கள் கடன் $1.73 டிரில்லியன் என உள்ளது.

    கடந்த முறை அதிபர் தேர்தலில் இரு கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் மாணவர் கடன் முக்கிய இடம் பிடித்தது.

    முதல் முறையாக அதிபரான ஜோ பைடன், சுமார் $430 பில்லியன் டாலர் மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்ய முயன்று போது உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்தது.

    இதனையடுத்து, "மதிப்புமிக்க கல்விக்கு சேமிப்போம்" (Saving on a Valuable Education) எனும் திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தில் 7.5 மில்லியன் பயனாளிகள் பதிவு செய்துள்ளனர்.

    இன்று, ஜோ பைடன் அரசின் கல்வி துறை, 1,53,000 மாணவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்துள்ளது.

    இன்று தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகை சுமார் $1.2 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    $12,000 அல்லது அதற்கும் கீழே கடன் பெற்று கடந்த 10 வருடங்களுக்கும் குறையாமல் தவணைகளை செலுத்தி வரும் மாணவர்களில், அதிபர் பைடன் கடந்த வருடம் கொண்டு வந்த "ஸேவ்" (SAVE) திட்டத்தில் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

    "யாருக்கு மிக அதிக தேவை உள்ளதோ அவர்களுக்கு கடன் நிவாரணம் வழங்கப்படுகிறது. மேலும், இப்பிரச்சனைக்கு அடிப்படை தீர்வு காணவும் நாங்கள் முயன்று வருகிறோம். கல்லூரி படிப்பிற்கான செலவு மிக அதிகமாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்" என இது குறித்து பேசிய கல்வி துறை செயலர் தெரிவித்தார்.

    பைடன் பதவி ஏற்றதில் இருந்து தற்போது வரை $138 பில்லியன் மதிப்பிலான மாணவர் கடனை ரத்து செய்துள்ளார். இதன் மூலம் இதுவரை 3.9 மில்லியன் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×