search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாங்குடி எம்.எல்.ஏ."

    • புதிய பஸ் சேவையை மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • கிராம மக்கள் கும்பம் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை ஒன்றியம் பெரியகாரை ஊராட்சியில் கள்ளிக்குடி கிராமம் உள்ளது. மருத்துவர்கள், பேராசிரியர்கள், அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிவோர் முக்கிய அரசியல் பிரமு கர்கள் என பல்வேறு தரப்பினரை உருவாக்கிய இந்த கிராமத்தில் போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்தது.

    இதனால் அந்த கிராம மக்கள் தங்களின் கிரா மத்துக்கு பஸ் வசதி செய்து தரவேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி அங்கிந்து தேவகோட்டை நகருக்கு புதிய பேருந்து சேவையை ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன் முன்னி லையில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த பேருந்தானது தேவகோட்டையில் இருந்து புலியடிதம்மம் செல்லும் போது எழுவன்கோட்டை, ஈகரை வழியாக கள்ளிக்குடி கிராமத்திற்கு வந்து புதுக்கோட்டை பெரிய காரை மற்றும் வேலாயுத பட்டினம் வழியாக புலியடி தம்மம் செல்கிறது.

    மேலும் இதே மார்க்கமாக தேவகோட்டைக்கு காலை மாலை ஆகிய இரு வேளைகளில் செல்கிறது. இந்நிகழ்ச்சியில் மருத்துவர் பூமிநாதன், போக்குவரத்து கழக காரைக்குடி மண்டல மேலாளர் சிங்காரவேல், வர்த்தக பிரிவு மேலாளர் நாகராஜன் கிளை மேலாளர் சொக்கலிங்கம், பொறி யாளர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கு வந்த அரசு அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை கிராம மக்கள் கும்பம் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    • காரைக்குடியில் மாங்குடி எம்.எல்.ஏ. இல்ல திருமண விழா நாளை நடக்கிறது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை மணமக்களின் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி -தேவி மாங்குடி தம்பதியரின் மகள் பொறியாளர் எம்.மதுமிதா.

    இவருக்கும், காரைக்குடி தாலுகா கோட்டையூர் கரு.குமார்-ஜெயந்தி கொப்பாத்தாள் தம்பதியரின் மகனும், தொழிலதிபர் சத்குரு தேவனின் மைத்துன ருமாகிய பொறியாளர் கே.மெய்யப்பனிற்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

    மதுமிதா-மெய்யப்பன் திருமணம் காரைக்குடி பி.எல்.பி. பேலஸில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் திருமணம் நடைபெறுகிறது.

    இதில் பல்வேறு துறைக ளின் அமைச்சர்கள், சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பி னர்கள், தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர்கள், அரசுத்துறை செயலா ளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், தொழிபதிபர்கள், காங்கி ரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை எஸ்.மாங்குடி-தேவி மாங்குடி மற்றும் கரு.குமார்- ஜெயந்தி கொப்பாத்தாள் குடும்பத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    ×