search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இல்ல திருமணம்"

    • பா.ஜ.க. மாநில இளைஞரணி துணைத்தலைவர் பாண்டித்துரை இல்ல திருமண விழா நடக்கிறது.
    • நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் காரைக்குடி பி.எல்.பி பேலஸ் திருமண மகாலில் நடக்கிறது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் வேலங்குடி சோலைமலையான் வீட்டை சேர்ந்த சோ.கரு.துரைராஜ்-சுசீலா தம்பதியரின் இளைய மகனும், பாரதீய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி துணை தலைவர், தொழிலபதிபர் து.பாண்டித்துரையின் சகோதரருமான சோ.கரு.து.கார்த்திகேயன் மணமகனுக்கும், பள்ளத்தூர் கோடியான் வீடு கோ.வெ.சபாரெத்தினம்-சாந்தி தம்பதியரின் மகளுமான ச.தாரணி மணமகளுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப் பட்டது.

    இவர்களது திருமணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் காரைக்குடி பி.எல்.பி பேலஸ் திருமண மகாலில் நடக்கிறது. பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

    இதில் முன்னாள் தேசிய செய லாளர் எச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய மகளிரணி தலைவி வானதிசீனிவாசன், மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா, மாநில பொதுச்செய லாளர்கள் அ.பி.முருகா னந்தம், ராம சீனிவாசன், எம்.முருகானந்தம், பொன்.வி.பாலகணபதி, மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    திருமண விழாவில் மாநிலம் முழுவதும் இருந்து மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், மகளிரணியினர், தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். திரும ணத்திற்கான ஏற்பாடுகளை து.பாண்டித்துரை, கோட்டையூர் பேரூராட்சி கவன்சிலர் பா.திவ்யா தம்பதியினர் மற்றும் பள்ளத்தூர் சபா ரெத்தினம்-சாந்தி தம்பதி யினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • மதுரையில் எஸ்ஸார்கோபி இல்ல திருமண விழா நாளை நடக்கிறது.
    • மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி வளாகம் ஐடா ஸ்கட்டர் மண்டபத்தில் நடக்கிறது.

    மதுரை

    மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி வளாகம் ஐடா ஸ்கட்டர் மண்டபத்தில் நாளை (19-ந்தேதி) ஞாயிறுக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் தி.மு.க. நிர்வாகி எஸ்ஸார் கோபி இல்லத்திருமணம் நடக்கிறது.

    கமுதி வட்டம் அரியமங்கலம் போஸ் தேவர்-காளியம்மாள் ஆகியோரின் மகன் வழி பேத்தியும் ராமநாதபுரம் மாவட்டம் வேப்பங்குளம் சர்க்கரைத்தேவர்- பூமயில் ஆகியோரின் மகள்வழி பேத்தியும், மதுரைமாநகர் மாவட்ட தி.மு.க. முன்னாள் பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி-சுப்புலட்சுமி ஆகியோரின் மகள் டாக்டர் பிரியதர்ஷினிக்கும், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் கடம்பன்குளம் செல்லையாதேவர்-சின்னத்தாய் ஆகியோரின் மகன் வழி பேரனும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் திருக்குறுங்குடி கிராமம் சுப்பிரமணிய தேவர்-பாக்கியலட்சுமி ஆகியோரின் மகள் வழி பேரனும் சென்னையை சேர்ந்த தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஓய்வு பெற்ற அலுவலர் முருகையா பாண்டியன்-ஓய்வு பெற்ற தமிழ்நாடு தேர்தல் துறை அலுவலர் வெள்ளையம்மாள் ஆகியோரின் மகன் டாக்டர் யோகேஷ் சக்திவேலுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.

    இந்த திருமண நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, நேரு, ஐ.பெரியசாமி, கே.ஆர்.பெரியகருப்பன், ஏ.வ.வேலு,தங்கம் தென்ன ரசு, சாத்தூர் ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனிதா ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் பொன் முத்துராமலிங்கம், சுப.தங்கவேலன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் முன்னாள், இன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர், வட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    • காரைக்குடியில் மாங்குடி எம்.எல்.ஏ. இல்ல திருமண விழா நாளை நடக்கிறது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை மணமக்களின் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி -தேவி மாங்குடி தம்பதியரின் மகள் பொறியாளர் எம்.மதுமிதா.

    இவருக்கும், காரைக்குடி தாலுகா கோட்டையூர் கரு.குமார்-ஜெயந்தி கொப்பாத்தாள் தம்பதியரின் மகனும், தொழிலதிபர் சத்குரு தேவனின் மைத்துன ருமாகிய பொறியாளர் கே.மெய்யப்பனிற்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

    மதுமிதா-மெய்யப்பன் திருமணம் காரைக்குடி பி.எல்.பி. பேலஸில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் திருமணம் நடைபெறுகிறது.

    இதில் பல்வேறு துறைக ளின் அமைச்சர்கள், சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பி னர்கள், தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர்கள், அரசுத்துறை செயலா ளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், தொழிபதிபர்கள், காங்கி ரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை எஸ்.மாங்குடி-தேவி மாங்குடி மற்றும் கரு.குமார்- ஜெயந்தி கொப்பாத்தாள் குடும்பத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • பா.ஜ.க. விவசாய அணி துணை தலைவர் எஸ்.ஆர்.தேவர் இல்ல திருமணம் நாளை நடக்கிறது.
    • காரைக்குடி-செக்காலை ரோடு சுபலட்சுமி மகாலில் திருமணம் நடக்கிறது.

    காரைக்குடி

    பா.ஜ.க. மாநில விவசாய அணி துணை தலைவர் எஸ்.ஆர்.தேவரின் மகள் வழிப்பேரனும் சி.விஜய செந்தில்-வி.எஸ்.மேகலா தம்பதியரின் மகனுமான வி.எஸ்.ராஜா சேதுபதிக்கும், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் முருகபூபதி தேவர்-ராமுத்தாய் தம்பதியரின் மகள் எம்.ஆர்.ஐஸ்வர்யாவிற்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.

    இந்த திருமணம் நாளை (புதன்கிழமை) காரைக்குடி-செக்காலை ரோடு சுபலட்சுமி மகாலில் நடக்கிறது. பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமை தாங்குகிறார். மாநில தலைவர் அண்ணாமலை திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

    இதில் சிவகங்கை மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கதிரவன், மாவட்ட பொது செயலாளர் மார்த்தாண்டன், மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் செந்தூர் பாண்டியன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம், பொது செயலாளர் கருப்பு முருகானந்தம்,மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி, திரைப்பட இயக்குனர் பேரரசு உள்பட மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள், தொழில் அதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.

    திருமணத்திற்கான ஏற்பாடுகளை எஸ்.ஆர்.தேவர் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

    ×