search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மா.சுப்பிரமணியன் பேச்சு"

    • அரசு சார்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
    • விஷகடிகளுக்கான மருந்துகள் அனைத்தும் சுகாதார நிலை யங்களிலும் கிடைக்கும் வகையில் உள்ளது. உலக அளவில் தமிழகத்தில் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என பேசினார்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராஜதானி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் குடியிருப்பு, ஹைவேவிஸ் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

    மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏக்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அமைச்சர் பேசியதாவது, தேனி மாவட்டம் கூடலூரில் ரூ.50 லட்சம் மதிப்பில் பொது சுகாதார அலகு கட்டிடம், பெரியகுளத்தில் ரூ.45லட்சம் மதிப்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், சிலமலை பகுதியில் ரூ.22.75 லட்சம் மதிப்பில் செவிலியர் குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

    அழகர்சாமிபுரம், மேலசிந்தலைச்சேரி பகுதியில் தலா ரூ.30 லட்சம் மதிப்பில் 2 புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை யில் தேனி மாவட்டத்தில் பல்வேறு அறிவிப்புகளுக்கு அரசாணை பெறப்பட்டு மிகவிரைவில் பணிகள் தொடங்க உள்ளது. அதன்படி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை உபகரணங்கள் வாங்க மற்றும் உடற்கூறு ஆய்வு மையம் அமைக்க ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    ஓடைப்பட்டியில் ரூ.1.20 கோடி மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம், தேவாரத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட உள்ளது. காமயகவு ண்டன்ப ட்டி மற்றும் கோம்பை பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் இந்திய மருத்துவ முறை புறநோயாளிகள் பிரிவு ஆஸ்பத்திரி கட்டப்பட உள்ளது.

    பாம்புகடி மற்றும் நாய்கடிகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் கிராம ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் உள்ள 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேவை யான மருந்து கையிருப்பில் உள்ளது.

    இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் மாரடைப்பு அறிகுறி உள்ளவர்களுக்கு முதலுதவி அளிக்க 3 வகையான 14 மாத்திரைகள் 8713 துணைசுகாதார நிலையங்களிலும், 2286 ஆரம்ப சுகாதார நிலை யங்களிலும் கிடைக்கும் வகையில் உள்ளது. உலக அளவில் தமிழகத்தில் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    ×