search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஸ்கோத் அல்வா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வித்தியாசமான ருசியை கொண்ட இந்த மஸ்கோத் அல்வா பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.
    • தூத்துக்குடி முதலூருக்கு வந்து இங்கு தேங்காய்பால் அல்வா செய்து விற்பனை செய்த தொடங்கினார்.

    நெல்லை:

    உலக அளவில் புகழ் பெற்றது நெல்லை அல்வா. ஆனால் அருகில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் முதலூரில் தயார் செய்யப்படும் மஸ்கோத் அல்வா அதற்கு போட்டியாக பொதுமக்களால் விரும்பப்பட்டு வருகிறது. வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் தேங்காய்ப் பாலில் செய்யும் அல்வா சிறப்பு பெற்றது. மஸ்கட்டில் இருந்து இலங்கைக்கு சென்றவர்கள் இந்த அல்வாவின் மணத்தை இலங்கைக்குப் பரப்ப, அங்கிருந்து புலம் பெயர்ந்த முதலூர்காரர்கள் நெல்லை, தூத்துக்குடிக்கு இந்த அல்வாவை செய்து கொடுக்க, இன்று முதலூர் மண்ணின் முக்கியத் தொழிலாகி விட்டது மஸ்கோத் அல்வா.

    1966-ம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது மஸ்கோத் அல்வா வரலாறு. ஜோசப் ஆபிரகாம் என்பவர் தேங்காய்ப்பாலுடன் முந்திரி பருப்பு, சுத்திகரிக்கப்பட்ட கோதுமை, உலர் திராட்சை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை கொண்டு மஸ்கோத் அல்வா தயார் செய்தார். வித்தியாசமான ருசியை கொண்ட இந்த மஸ்கோத் அல்வா பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. தற்போது பல ஆண்டுகளை கடந்து ஜோசப் ஆபிரகாம் அவரது மகன் ஜெயசீலன் என தொடர்ந்து இந்த அல்வா தொழில் ஈடுபட்ட நிலையில் அவரது பேரன் சைமன் ஐசக் என்பவர் தற்போது இதனை நடத்தி வருகிறார்.

    இது குறித்து அவர் கூறும்போது, எனது தாத்தா தனது மூத்த மகள் தேவகனியுடன் சேர்ந்து இலங்கையில் வசித்த போது இந்த அல்வாவை பற்றி அறிந்தார். பின்னர் அவர் தூத்துக்குடி முதலூருக்கு வந்து இங்கு தேங்காய்பால் அல்வா செய்து விற்பனை செய்த தொடங்கினார். நாளடைவில் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இன்று முதலூர் அல்வா என்றால் நாடு முழுவதும் தெரியும் படி மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது.

    தற்போது வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏறுப ஆன்லைன் மூலமும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு டோர் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. எனினும் அதற்கு புவிசார் குறியீடு வழங்கப்படவில்லை.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, காஞ்சிபுரம் பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சேலம் சுங்குடிச் சேலை பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

    கடைசியாக திருவண்ணாமலை ஜடேரி நாமக்கட்டி, வீரமாங்குடி செடிபுட்டா சேலை, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அந்த வரிசையில் முதலூர் மஸ்கோத் அல்வாவிற்கும் புவிசார் குறியீடு வழங்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் மஸ்கோத் அல்வாவிற்கும் புவிசார் குறியீடு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

    ×