search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைநீர் தேங்கியதால்"

    • கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் பேரூராட்சி பகுதிகளிலும் விடிய, விடிய மழை பெய்தது.
    • மழை நீர் செல்ல சாக்கடை வசதி இல்லாததால் மழை வெள்ளம் ஈரோடு-சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் தேங்கி நின்றது.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது.

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் பேரூராட்சி பகுதிகளிலும் விடிய, விடிய மழை பெய்தது. மழை நீர் செல்ல சாக்கடை வசதி இல்லாததால் மழை வெள்ளம் ஈரோடு-சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து ஒரு வழிபாதையாக மாற்றிவிடப்பட்டது. மேலும் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ரோட்டில் தேங்கிய மழை வெள்ளத்தை வேறு பக்கம் திருப்பி விடும் பணி நடந்து வருகிறது.

    ×