search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலங்கரை"

    • நாகர்கோவில் மேலத்தெரு கரை புனித அந்தோணியார் மலங்கரை கத்தோலிக்க ஆலய திருவிழா நேற்று தொடங்கி 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • திருவிழா ஏற்பாடுகளை பங்குபேரவை பெருமக்கள் செய்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மேலத்தெரு கரை புனித அந்தோணியார் மலங்கரை கத்தோலிக்க ஆலயம் புகழ்பெற்ற ஆலயம் ஆகும். இக்கோவிலில் 791 ஆண்டுகளுக்கு முந்தைய புனித அந்தோணியாரின் அழியாத தோல் (திருப்பண்டம்) வைக்கப்பட்டுள்ளது.

    இக்கோவிலின் திருவிழா நேற்று 5 ஆம் தேதி தொடங்கியது. வருகிற   முதல் நாள் நிகழ்ச்சியாக மங்கல இசை இசைக்கப்பட்டு ஜெபமாலை நடத்தப்பட்டது. பிறகு பங்குத்தந்தை அருட்தந்தை மரிய ஜான் கொடியேற்ற விழாவை தொடங்கி வைத்தார் இரவில் அன்பின் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

    இன்று 2வது நாள் நிகழ்ச்சி நடக்கிறது மாலை 5 மணிக்கு புனித அந்தோனியார் நவநாள் நற்செய்திப் பெருவிழா நடைபெறுகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. வருகிற 13-ஆம் தேதி 9வது நாள் முதல் திருவிருந்து வழங்குதல், நலத்திட்ட உதவி வழங்குதல் நடைபெறுகிறது.

    மாலை 5 மணிக்கு வாத்தியார்விளை சந்திப்பு போலீஸ் குடியிருப்பு டவுன் ரயில்வே நகர் மாதா குடியிருப்பு வழியாக தேர்பவனி நடைபெறுகிறது.

    அதன் பிறகு புனித அந்தோ னியார் நவநாள் திருப்பண்டம் முத்தம் செய்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கிறார்கள்.

    14ந் தேதி 10-ம் நாள் நிகழ்ச்சியாக நாகர்கோவில் மறைமாவட்ட குருக்கள் பங்குபெறும் திருப்பலி நடைபெறுகிறது பிறகு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து அன்பின் விருந்து வழங்கப்படுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை மரிய ஜாண் செயலாளர் சேவியர் பொருளாளர் தாசன் செய்தித்தொடர்பாளர் அருள் குமரேசன் மற்றும் பங்கு அருட்கன்னியர்கள் பங்குபேரவை பெருமக்கள் செய்து வருகிறார்கள்.

    ×