என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மருமகள் மாயம்"
- மாமனார் புகார்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த பிரம்மதேசம் சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி (வயது 25). இவருக்கும் பாப்பாந்தாங்கலை சேர்ந்த கலையரசி (22) என்பவருக்கும் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து சில நாட்களிலேயே தீபன் சக்கரவர்த்தி வேலை காரணமாக துபாய் சென்று விட்டார். கடந்த 24-ந் தேதி இரவு 8 மணிக்கு கலையரசி தூங்க சென்றார்.
மறுநாள் காலையில் அவரது மாமனார் பிச்சாண்டி மருமகளை எழுப்ப சென்றபோது அவரை காணவில்லை. தூங்குவது போல துணி தலையணை வைத்துவிட்டு அவர் எங்கேயோ சென்று விட்டார் என தெரிய வந்தது.
இதுகுறித்து கலையரசி மாமனார் பிச்சாண்டி பிரம்மதேசம் போலீசில் மருமகளை காணவில்லை என புகார் செய்தார். சப் - இன்ஸ்பெக்டர் பாபா வழக்கு பதிவு செய்து காணாமல் போன கலையரசியை தேடி வருகின்றார்.
- பண்ருட்டி அருகே மாமியாருடன் தகராறு செய்த மருமகள் மாயமானார்.
- பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே பண்டரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி ஞானசவுந்தரி (வயது25). இவர் நேற்று முன்தினம் தனது மாமியாருடன் சண்டை போட்டுக் கொண்டு நத்தம் கிராமத்தில் உள்ள தனதுசித்தப்பா வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக தூங்கியவர் அதிகாலை பார்த்த போது திடீரென்று காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை வலை வீசி தேடு வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்