search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாமியாருடன் தகராறு"

    • பண்ருட்டி அருகே மாமியாருடன் தகராறு செய்த மருமகள் மாயமானார்.
    • பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே பண்டரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி ஞானசவுந்தரி (வயது25). இவர் நேற்று முன்தினம் தனது மாமியாருடன் சண்டை போட்டுக் கொண்டு நத்தம் கிராமத்தில் உள்ள தனதுசித்தப்பா வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக தூங்கியவர் அதிகாலை பார்த்த போது திடீரென்று காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை வலை வீசி தேடு வருகிறார்கள்.

    ×