search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருது பாண்டியர்கள்"

    • மருது பாண்டியர்களின் நினைவு தினம் திருப்பத்தூரில் கலெக்டர்- போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தனர்.
    • சாமுண்டீஸ்வரி மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வருகின்ற 24-ந் தேதி மருது பாண்டியர்களின் நினைவு நாள் அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    அதனை முன்னிட்டு போக்குவரத்து நடவடிக்கைகள், பாதுகாப்பு பணிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், மருது பாண்டியர்களின் வாரிசுதாரர் ராமசாமி,திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, வருவாய் ஆய்வாளர் மன்சூர் அலிகான், பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி, திருப்புத்தூர் நகர் காவல் சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், செல்வபிரபு, சாமுண்டீஸ்வரி மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • 221-வது ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு மருது பாண்டியர்கள் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • முன்னதாக பாரதி நகரில் மருது பாண்டியர்களின்ர் உருவப் படத்திற்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ராமநாதபுரம்

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில், ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ. முனியசாமி தலைமையில், மாமன்னர் மருதுபாண்டியர்கள் 221-வது ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு மாமன்னர் மருதுபாண்டியர் இளைஞர் பேரவை மற்றும் வாலாந்தரவை கிராம மக்கள் சார்பாக ஏற்பாடு செய்திருந்த விழாவில் அ.தி.மு.க. சார்பில் மாமன்னர் மருது பாண்டியர்களின் திருவுருவசிலைக்கு மலர்த் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    முன்னதாக பாரதி நகரில் மருது பாண்டியர்களின்ர் உருவப் படத்திற்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் சாமிநாதன், ராமநாதபுரம் நகர் கழக செயலாளர் பால்பாண்டியன், எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் ரத்தினம், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜானகிராமன், எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் ஜெயபால், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் கருப்பையா, சார்பு அணி மாவட்ட செயலாளர் சேது பாலசிங்கம், செந்தில்குமார், சரவணகுமார், ஸ்டாலின், நகர் மன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    ×