search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரம் ஏறும்"

    • வடிவேல் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
    • நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே உள்ள புதுசூரிபாளையம் ஆண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் வடிவேல் (25). மரம் ஏறும் தொழிலாளி. இவரது மனைவி சிந்து. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று குடும்ப தகராறு காரணமாக வடிவேல் தனது மனைவியுடன் சண்டையிட்டு தென்னை மரத்திற்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.

    இதனையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த வடிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×