search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரங்கள் அகற்றம்"

    • ஒரு மரத்தை வெட்டினால், 10 மரங்கள் நட வேண்டும்.
    • சாலை யோர மரங்களால் வெயிலின் தாக்கம் தெரியாமல் வாகன ஓட்டிகள் பயணித்தனர்.

    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை வட்டம் கெலமங்கலம் அருகே சாலை விரிவாக்கத்திற்காக 200 ஆண்டு பழமைவாய்ந்த ஆலமரம் அகற்றப்பட்டுள்ளது.

    ஓசூரில் இருந்து ராயக்கோட்டை வழியாக தருமபுரி அதியமான் கோட்டை செல்லும் சாலை மற்றும் கெலமங்கலம் - ராயக் கோட்டை சாலை ஆகியவை விரி வாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

    இதனால், சாலையோர புளியமரங்கள் உட்பட பல்வேறு வகையான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் சாலையோர புளிய மரங்களை ஏலம் எடுத்து, புளியை பறித்து தனிநபர்கள் விற்பனை செய்து வந்த நிலையில், அந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளதால், வரும் காலங்களில் புளியின் தேவை அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

    இதற்கிடையே, கெலமங்கலம் - ராயக்கோட்டை சாலையில் உள்ள ஜெக்கேரி அருகே, 200 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய ஆலமரம் சாலை விரிவாக்க பணிக்காக வெட் டப்பட்டுள்ளது.

    இந்த மரத்தில் நூற் றுக்கணக்கான விழுதுகள் மற்றும் ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு வாழ்விடமாக இருந்தது. இவற்றை வெட்டியுள்ளது பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை வேதனை அடைய செய்துள்ளது. இதேபோல், பல ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

    ஒரு மரத்தை வெட்டினால், 10 மரங்கள் நட வேண்டும். ஆனால், நெடுஞ்சாலைத்துறை அதுபோல் எங்கு நட்டுள்ளது என்பது தெரியவில்லை.

    கெலமங்கலம் - ராயக்கோட்டை மற்றும் ஒசூர் - தருமபுரி சாலையில் செல்லும் போது, சாலையோர மரங்களால் வெயிலின் தாக்கம் தெரியாமல் வாகன ஓட்டிகள் பயணித்தனர்.

    இந்த மரங்கள் வெட்டப்பட்டுவிட்டதால், இச்சாலைகள் பசுமையை இழந்து நிற்பதாக, வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.

    ×