search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை விரிவாக்கம்"

    • நிகழ்ச்சிகளுக்கு வல்லம் ஒன்றிய தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார்
    • நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் அக்பர் அலி வரவேற்றார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வல்லம் ஒன்றியம் நாட்டார்மங்கலம்-மேல் ஒலக்கூர். தொண்டூர் செல்லும் சாலையை ரூ. 2 கோடியே 75 லட்சம் மதிப்பில் அகலப்படுத்தி விரிவாக்கம் செய்யும் பணிக்கும், நாட்டார்மங்கலம் தொண்டூர் சாலை பாலம் கட்டுதல் பணிக்கும், ரூ. 2 கோடி மதிப்பில் நாட்டார் மங்கலம் தொண்டூர் இடை யில் மேம்பாலம் கட்டும் பணிக்கும், மொடையூர் சாலை ரூ. 40 லட்சம் மதிப் பில் சீர் செய்யவும் ஜெயங் கொண்டான் பேரணி சாலையை ரூ. 2 கோடியே 10 லட்சம் மதிப்பில் விவாக்கம் செய்து புதிய தார் சாலை அமைப்பதற்கும் பூமி பூஜை விழா நாட்டா மங்கலம், புதுசொரத்தூர் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிகளுக்கு வல்லம் ஒன்றிய தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரியம்மாள் மாணிக்கம், அசோக் குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் பக்தவச்சலம், கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறி யாளர் அக்பர் அலி வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பணிகள் செய்வதற்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அண்ணா துரை, துரை, இளம்வழுதி, இளநிலை பொறியாளர்கள் ஏழுமலை சேகர் மாவட்ட கவுன்சிலர் அன்பு செழியன், ஒன்றிய கவுன்சிலர்கள் பத்மநாபன், விஜயா கண்ணன், கலைவாணி கிருஷ்ணமூர்த்தி , சிலம்பரசி பாண்டியராஜன் அமைப்பு சாராதொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தமிழரசன், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கார்வண்ணன், உள்ளிட் ேடார் கலந்து கொண்டனர்.

    • சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறும் இடங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மொத்தம் 4,300 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.
    • மரக்கன்றுகள் நடப்படுவதோடு அவற்றை பராமரித்து மரமாக உருவாகும்வரை தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் முதல் வெண்ணாங்குப்பட்டு வரையிலான 32 கி. மீ. தார்ச்சாலை மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பள்ளம்பாக்கம் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதி முதல் வெண்ணாங்குப்பட்டில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை வரை ரோடு குறுகலாக உள்ளதால் நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தது.

    ஏற்கனவே இருந்த சாலையின் அகலமான 23 அடியை, தற்போது இரண்டு புறங்களிலும் தலா 5 அடி விரிவாக்கம் செய்து, 33 அடி அகல சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டு பணி நடக்கிறது. மேலும், இடைப்பட்ட துாரத்தில் குறுகலாக இருந்த பழைய 4 சிறுபாலங்கள் அகற்றப்பட்டு, புதிய பாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.

    இதேபோல் முதுகரை-கடலூர் சாலை, செய்யூர்-படாளம் சாலையும் விரிவாக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலைகள் ஓரமாக பசுமையான மரங்கள் உள்ளன. சாலையில் செல்வோருக்கு இதமான காற்றையும், வழி போக்கர்களுக்கு நிழலையும் தருகின்றன. இந்த மரங்களை நெடுஞ்சாலைதுறை பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர். இந்த சூழலில் பெருகி வரும் வாகன போக்குவரத்தால் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி உருவாகிறது. இதனால் சாலையை விரிவாக்கம் செய்வது அவசியம் என்று நெடுஞ்சாலைதுறையினர் கருதுகின்றனர். இதற்காக இந்த 3 சாலைகளும் அகலப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடக்கிறது. இந்த பணிகளுக்காக சாலை ஓரம் நிற்கும் பசுமையான மரங்களை வெட்டி அகற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதன்படி முதுகரை -கடலூர் சாலையில் 214 மரங்களும், மதுராந்தகம்-வெண்ணாங்குப்பட்டு சாலையில் 195 மரங்களும், செய்யூர்-படாளம் சாலையில் 12 மரங்களும் வெட்டுவதற்கு மாவட்ட பசுமைக் குழுக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில் இந்த சாலைகளின் ஓரமாக உள்ள மரங்கள் குறைந்தது 50 ஆண்டுகள் பழமையானவை. இந்த மரங்கள் இல்லாமல் போனால், இன்னும் வெப்பம் அதிகரிக்கும் என்றனர்.

    இதுபற்றி செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலர் ரவிமீனா கூறும்போது, சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறும் இடங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மொத்தம் 4,300 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. முதுகரை-கடலூர் சாலையில் 500 மரக்கன்றுகளும், படாளம் ஜி.எஸ்.டி. ரோடு-செய்யூர் சாலையில் 300 மரக்கன்றுகளும், வெண்ணங்குபட்டு சாலையில் 650 மரக்கன்றுகளும் நடப்படும். சாலை விரிவாக்கம் முடிந்ததும், அவர்கள் மரக்கன்றுகளை நடத்தொடங்குவார்கள் என்றார். புதிதாக நடப்படும் மரக்கன்றுகள் அடுத்த 10 ஆண்டுகளில் மரங்களாக வளரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே மரக்கன்றுகள் நடப்படுவதோடு அவற்றை பராமரித்து மரமாக உருவாகும்வரை தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.

    • ஒரு மரத்தை வெட்டினால், 10 மரங்கள் நட வேண்டும்.
    • சாலை யோர மரங்களால் வெயிலின் தாக்கம் தெரியாமல் வாகன ஓட்டிகள் பயணித்தனர்.

    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை வட்டம் கெலமங்கலம் அருகே சாலை விரிவாக்கத்திற்காக 200 ஆண்டு பழமைவாய்ந்த ஆலமரம் அகற்றப்பட்டுள்ளது.

    ஓசூரில் இருந்து ராயக்கோட்டை வழியாக தருமபுரி அதியமான் கோட்டை செல்லும் சாலை மற்றும் கெலமங்கலம் - ராயக் கோட்டை சாலை ஆகியவை விரி வாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

    இதனால், சாலையோர புளியமரங்கள் உட்பட பல்வேறு வகையான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் சாலையோர புளிய மரங்களை ஏலம் எடுத்து, புளியை பறித்து தனிநபர்கள் விற்பனை செய்து வந்த நிலையில், அந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளதால், வரும் காலங்களில் புளியின் தேவை அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

    இதற்கிடையே, கெலமங்கலம் - ராயக்கோட்டை சாலையில் உள்ள ஜெக்கேரி அருகே, 200 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய ஆலமரம் சாலை விரிவாக்க பணிக்காக வெட் டப்பட்டுள்ளது.

    இந்த மரத்தில் நூற் றுக்கணக்கான விழுதுகள் மற்றும் ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு வாழ்விடமாக இருந்தது. இவற்றை வெட்டியுள்ளது பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை வேதனை அடைய செய்துள்ளது. இதேபோல், பல ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

    ஒரு மரத்தை வெட்டினால், 10 மரங்கள் நட வேண்டும். ஆனால், நெடுஞ்சாலைத்துறை அதுபோல் எங்கு நட்டுள்ளது என்பது தெரியவில்லை.

    கெலமங்கலம் - ராயக்கோட்டை மற்றும் ஒசூர் - தருமபுரி சாலையில் செல்லும் போது, சாலையோர மரங்களால் வெயிலின் தாக்கம் தெரியாமல் வாகன ஓட்டிகள் பயணித்தனர்.

    இந்த மரங்கள் வெட்டப்பட்டுவிட்டதால், இச்சாலைகள் பசுமையை இழந்து நிற்பதாக, வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.

    • 2.40 கி.மீ. நீளம் சாலையை ரூ 17.50 கோடி மதிப்பில் இரு வழிதடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலபடுத்தும் பணி நடக்கிறது.
    • சரி மட்ட அளவுகள், அடர்த்தி ஆகியவற்றை சரிபார்க்கும் கருவிகளை கொண்டு சேலம் தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளர் வச்சலா வித்தியானந்தி, நேரில் களஆய்வு செய்தார்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்திற்கு உட்பட்ட ராயக்கோட்டை-அத்திப்பள்ளி சாலையில் நல்லராலப்பள்ளி முதல் நாகமங்கலம் வரை முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2.40 கி.மீ. நீளம் சாலையை ரூ 17.50 கோடி மதிப்பில் இரு வழிதடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலபடுத்தும் பணி நடக்கிறது.

    மேலும் தேன்கனி க்கோட்டை-கெலமங்கலம் வழி உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 8-6 கி.மீ நீளம் ரூ 11-00 கோடி மதிப்பில் நடைப்பெற்று வரும் சாலை பணிகளின் நீளம், அகலம், மற்றும் சரி மட்ட அளவுகள், அடர்த்தி ஆகியவற்றை சரிபார்க்கும் கருவிகளை கொண்டு சேலம் தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளர் வச்சலா வித்தியானந்தி, நேரில் களஆய்வு செய்தார்.

    இதில் தேன்கனிக்கோட்டை உதவி கோட்டப் பொறியாளர் திருமால்செல்வன், கிருஷ்ணகிரி உதவி கோட்டப் பொறியாளர் பத்மாவதி, ராயக்கோட்டை உதவி பொறியாளர் மன்னர் மன்னன், கிருஷ்ணகிரி தரக்கட்டுப்பாடு இளநிலை பொறியாளர் வெண்ணிலா, சாலை ஆய்வாளர்கள் மற்றும் சாலை பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • கதிர் ஆனந்த் எம்.பி. நடவடிக்கை
    • ரூ.7.76 கோடி ஒதுக்கீடு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி யின் மையப்பகுதியாக கிரீன் சர்க்கிள் உள்ளது. இப்பகுதியில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் அதனை சரி செய்வதற்கு பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன.

    நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் அனுமதி ஆய்வுக்கு பின்னர் கிரீன் சர்க்கிள் பூங்காவின் அளவை குறைப்பதுடன் அப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டது.

    ஆனால் கிரீன் சர்க்கிள் பூங்காவின் அளவை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.

    இதையடுத்து வேலூர் கிரீன் சர்க்கிள் பூங்காவின் அளவை குறைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு பரிந்துரை அனுப்ப ப்பட்டது.

    மேலும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம் கதிர் ஆனந்தும் இது தொடர்பாக மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்தார்.

    இந்த கோரிக்கைகளை ஏற்று ரூ.7.76 கோடி செலவில் கிரீன் சர்க்கிள் பூங்காவின் அளவு மாற்றியமைப்பது, வடிகால் மற்றும் பாதுகாப்பு பலகைகள் உள்பட அப்பகுதியிலுள்ள சர்வீஸ் சாலையை விரிவாக்கம் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

    மேலும், இதற்கான ஏல ஆவணங்களை அடுத்த 4 நாள்களுக்குள் தயார் செய்து அளிக்க தனியார் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி. கூறுகையில்:- 2019-ம் ஆண்டு வேலூர் மக்களவைத் தேர்த லின்போது போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேலூர் கிரீன்சர்க்கிள் பூங்காவின் அளவை குறைக்கவும், சர்வீஸ் சாலைகளை விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தி ருந்தேன்.

    அதனை நிறைவேற்றும் விதமாக தற்போது பணிகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சா லைத்துறை ஆணை யம் ஒப்புதல் அளித்துள்ளது என கூறினார்.

    • தஞ்சை விரிவாக்க பணிக்காக நாளை மின் வினியோகம் இருக்காது.
    • காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சாலை விரிவாக்க பணிக்காக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் மேரீஸ் கார்னர் முதல் காவேரி கல்யாண மண்டபம் வரை, கோரிக்குளம், இருபது கண் பாலம், மண்ணையார் தெரு, பூக்கார தெரு, மாரிகுளம், அன்பு நகர், ஜெகநாதபுரம், சிந்து நகர் வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையில் 7 முக்கிய சாலைகள் விரிவுபடுத்தப்படுகின்றன.
    • விரிவுபடுத்தப்பட உள்ள சாலைகள் குறைந்தபட்சம் 59 அடியாகவும், அதிகபட்சம் 100 அடி வரையிலும் அகலமாக இருக்கும்.

    சென்னை:

    சென்னை மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக மேம்பாலம், சாலை விரிவாக்கம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    அந்த அடிப்படையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சென்னையில் உள்ள 7 முக்கிய சாலைகளை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது.

    அதாவது அண்ணா சாலை-மத்திய கைலாஷ் இடையேயான 3 கிலோ மீட்டர் தூரமுள்ள சர்தார் படேல் சாலை, பாந்தியன் சாலை-கூவம் இடையேயான 0.72 மீட்டர் தூரமுள்ள எத்திராஜ் சாலை, கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை-அண்ணாநகர் முதலாவது பிரதான சாலை வரை 1.4 கிலோ மீட்டர் தூரமுள்ள கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை-வள்ளுவர் கோட்டம் சாலை வரை 1.1 கிலோ மீட்டர் தூரமுள்ள டேங்க் பண்ட் சாலை, அண்ணா சாலை-பாந்தியன் சாலை வரை 1.3 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரீம்ஸ் சாலை, 1.3 கிலோ மீட்டர் தூரமுள்ள நியூ ஆவடி சாலை, 1.5 கிலோ மீட்டர் தூரமுள்ள பெரம்பூர் பேரக்ஸ் சாலை ஆகிய 7 சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன.

    சர்தார் படேல் சாலையைப் பொறுத்தவரை தற்போது 20 மீட்டர் (65 அடி) அகலத்தில் உள்ளது. இது, 30.5 மீட்டர் (100 அடி) அகலப்படுத்தப்படுகிறது. அதேபோன்று எத்திராஜ் சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, டேங்க் பண்ட் சாலை, கிரீம்ஸ் சாலை, நியூ ஆவடி சாலை ஆகியவை 18 மீட்டர் (59 அடி) வரை அகலமாகின்றன. பெரம்பூர் பேரக்ஸ் சாலையை 24 மீட்டர் (78 அடி) வரை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பெருநகர சென்னை வளர்ச்சிக்குழும அதிகாரி கூறியதாவது:-

    போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், மெட்ரோ ரெயில் நிலையங்களுடன் அந்தந்தப் பகுதிகளில் உள்ள சாலைகளை இணைக்கும் வகையிலும் இந்த சாலை விரிவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த சாலை விரிவாக்கம் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்ய ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கத்துக்கு தேவையான இடங்கள், கட்டிடங்களை கையகப்படுத்துவது, கையகப்படுத்தப்படும் கட்டிடங்களை இடிப்பது, அந்த இடங்கள், கட்டிடங்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்மானிப்பது, விரிவாக்கம் செய்யப்பட உள்ள பகுதியில் இருக்கும் மரங்களை அகற்றுவது போன்ற சாலை விரிவாக்கத்தை மேற்கொள்ள சாத்தியமான மேம்பாடுகளை அடையாளம் காணும் பணிகளை இந்தக் குழு ஆய்வு செய்யும்.

    இந்த ஆய்வறிக்கையை ஆலோசனைக் குழு ஒரு மாதத்தில் அளிக்கும். அதன்பின்பு சாலை விரிவாக்கத்துக்கு தேவையான இடங்கள் கையகப்படுத்தப்பட்டு விரிவாக்கப் பணிகள் தொடங்கும். தற்போது இருந்துவரும் பாதசாரிகளின் நடைமேடையைத் தவிர்த்து புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள அகலத்தில் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்படும்.

    இதேபோன்று சென்னையையொட்டி உள்ள வெளிவட்டச் சாலைகளுடன் அந்த சாலைகளையொட்டி உள்ள கிராமச் சாலைகளை இணைக்கும் திட்டம் உள்ளது.

    முதல்கட்டமாக சீமாபுரம், திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்கள் வெளிவட்டச் சாலையுடன் இணைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×