search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயிலாடுதுறை மாயூரநாதசாமி கோவில்"

    • முன்னதாக கோவிலின் அருகில் 123 குண்டங்களுடன் பிரம்மாண்ட யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • புனிதநீர் அடங்கிய குடங்களை சிவாச்சாரியார்கள் தோளில் சுமந்து கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து கோபுர கலசத்தை வந்தடைந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். அம்மன் மயில் உருவில் இறைவனை பூஜித்ததாக புராண வரலாறு கூறுகிறது.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

    பணிகள் முடிவடைந்த நிலயைில் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கோவிலின் அருகில் 123 குண்டங்களுடன் பிரம்மாண்ட யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலையில் வைப்பதற்காக கங்கை, யமுனை, சிந்து, காவிரி உள்ளிட்ட 9 நதிகளில் இருந்து தீர்த்தங்கள் யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பூஜைகள் தொடங்கின.

    தொடர்ந்து, கடந்த 31-ந் தேதி மாலை முதற்கால யாகசாலை பூஜைகள் நடந்தது. 1-ந் தேதி 2,3-ம் கால யாகசால பூஜையும், நேற்று 4, 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 6-ம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹுதி நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், கடம் புறப்பாடு நடைபெற்றது.

    புனிதநீர் அடங்கிய குடங்களை சிவாச்சாரியார்கள் தோளில் சுமந்து கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து கோபுர கலசத்தை வந்தடைந்தனர்.

    தொடர்ந்து, திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, வானில் கருடன் வட்டமிட, மேளதாளங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    பாதுகாப்பு பணிக்காக சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமானோர் திரண்டதால் நகரமே விழாக்கோலம் பூண்டது.

    ×