search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயானத்திற்கு"

    குமாரபாளையம் அருகே 3 தலைமுறைகளாக தீராத மயான வழித்தடம் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி வீரப்பம்பாளையம் பகுதியில் உள்ள அருந்த–தியர் தெருவில் சடலங்கள் மயானத்திற்கு கொண்டு செல்ல வழி இல்லாமல் இருந்தது.

    இதனால் வாய்க்கால், முட்புதர்களை கடந்து சடலத்தை மயானத்திற்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்து வரும் நிலை 3 தலைமுறைக்கும் மேலாக நீடித்து வந்தது. அந்த பகுதி பட்டா இடத்தின் உரிமையாளர்கள் வழித்தடம் கொடுக்க உடன்ப–டாமல் இருந்து வந்தனர்.

    இது குறித்து மாவட்ட கலெக்டர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து இதற்கான முயற்சி செய்த நிலையில் தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா தனது பதவி காலத்தில் இதகு தீர்வு காண வேண்டும் என, வழித்தடத்தின் அருகில் உள்ள இட உரிமையாளர்கள் வசம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இதை தொடர்ந்து தீர்வு ஏற்பட்டு, இட உரிமையாளர்கள் இடம் தர ஒத்துக்கொண்டனர். இதையடுத்து பொக்லைன் மூலம் மயானத்திற்கு பாதை அமைக்கப்பட்டது. இந்த பாதை வழியாக மயானத்திற்கு சடலங்களை எவ்வித தடையும் இல்லாமல் எடுத்து செல்லலாம் என்று ஊராட்சி தலைவி புஷ்பா தெரிவித்தார்.

    இதற்கு உதவி செய்த அனைவருக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

    ×