search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயங்கி விழுந்த முதியவர்"

    • அமிர்தலிங்கம் தன் மனைவியிடம் கோபித்துக் கொண்டு தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.
    • சம்பவத்தன்று திடீரென்று அதே பகுதியில் சாலையில் மயங்கி விழுந்தார்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 65). இவர் தன் மனைவியிடம் கோபித்துக் கொண்டு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நடுவீரப்பட்டு பகுதியில் தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று திடீரென்று அதே பகுதியில் சாலையில் மயங்கி விழுந்தார். இதனை தொடர்ந்து அமிர்தலிங்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அமிர்தலிங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×