search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவியுடன்"

    • சேலம் கொண்ட லாம்பட்டி பெரியபுத்தூர் இஞ்சிமரத்துக்காடு பகு தியை சேர்ந்தவர் மாரி யப்பன். இவரது மகன் அரவிந்த் பெட்ரோல் பங்க் ஊழியர்.
    • தந்தை இறந்து விட்ட நிலையில் தாயுடன் வசித்து வந்தார்.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டி பெரியபுத்தூர் இஞ்சிமரத்துக்காடு பகு தியை சேர்ந்தவர் மாரி யப்பன். இவரது மகன் அரவிந்த் 21, பெட்ரோல் பங்க் ஊழியர். தந்தை இறந்து விட்ட நிலையில் தாயுடன் வசித்து வந்தார்.

    கள்ளக்காதல் தகராறு

    அரவிந்த் தனது நண்ப ரான திருமலைகிரியை சேர்ந்த மனோஜ்குமார் என்ப வரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த நிலையில் அரவிந்த்குமார் மனைவியு டன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் தனி மையில் சந்தித்து வந்தனர். இதனை அறிந்த மனோஜ்குமார் அரவிந்தை கண்டித்தார்.

    ஆனால் அதனை கண்டு கொள்ளாத இருவரும், தனிமையில் சந்தித்ததுடன் செல்போனிலும் பேசி வந்தனர். இதையடுத்து மனோஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த 18-ந் தேதி அரவிந்தை மறை வான இடத்திற்கு அழைத்து சென்று கட்டையால் சர மாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

    இதற்கிடையே இது தொடர்பாக விசாரணை நடத்திய கொண்ட லாம்பட்டி போலீசார் கொலையில் தொடர்புடைய மனோஜ் குமார் மற்றும் அவருடையை நண்பர்கள் ராமச்சந்திரன் 26, கார்த்திக் 21, ரத்தினம் 33, கவுரி சங்கர் 30 ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    பரபரப்பு வாக்குமூலம்

    கைதான மனோஜ்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது-

    அரவிந்த் , எனது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது அர விந்துக்கும், எனது மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது . இதனை அறிந்த நான் அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் இது தொடர்பாக அவர்களை கண்டித்த போதும் கண்டு கொள்ளவில்லை. இதனால் அரவிந்தை தனது நண்பர்க ளுடன் சேர்ந்து தீர்த்து கட்ட முடிவு செய்தேன்.

    அதன்படி நண்பர்கள் உதவியுடன் திட்டமிட்டப்படி அரவிந்தை பெரியபுதூர் காட்டுப்பகுதிக்கு அைழத்து சென்றோம். அங்கு வைத்து எனது மனைவியுடன் பேசக்கூடாது, தனிமையில் சந்திக்க கூடாது என்று கூறினோம். ஆனால் அவர் அதற்கு சம்மதிக்க வில்லை.

    ஆணி பதித்த கட்டை

    இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் ஆணி பதித்த கட்டையால் அவரை சரமாரியாக தாக்கினோம், இதில்நிலை குலைந்த அரவிந்த் உயிர் பிழைக்க அங்கிருந்து சிறிது தூரம் ஓடினார். பின்னர் மயங்கி கீழே விழுந்தார். உடனே நாங்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டோம், ஆனாலும் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். 

    ×