search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபானங்கள் திருட்டு"

    • மதுபான கடையில் பொருத்தப்பட்டிருந்த 2 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கடையின் பூட்டு உடைக்கட்டபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுப்பாட்டில்களை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பெரும்பாறை:

    பண்ணைக்காடு அருகே வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைப்பாதையில் மூலையாறு பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு விற்பனையானர் கண்ணன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு செல்வம் என்பவர் கடையை திறக்க வந்தார்.

    அப்போதுமதுபான கடையில் பொருத்தப்பட்டிருந்த 2 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கடையின் பூட்டு உடைக்கட்டபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதனையடுத்து கடைக்குள் சென்று பார்ந்த போது, அங்கிருந்த ரூ.1,000 மதிப்பிலான மதுப்பாட்டில்கள் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வத்தலக்குண்டு கட்டக்காமன்பட்டியை சேர்ந்த மதுபான கடை மேற்பார்வையாளர் பெரியசாமி தாண்டிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுப்பாட்டில்களை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×