search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது விற்றவர் கைது"

    • மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது

    கரூர்

    குளித்தலை அருகே உள்ள ஈச்சம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மதுவிற்ற கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 42) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    புதுக்கோட்டை:

    விராலிமலை அருகே மாதிரிபட்டி பகுதியில் மது விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த வானதிராயன்பட்டி அத்திப்பள்ளத்தை சேர்ந்த மாமுண்டி மகன் கோபால் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்."

    • மத்தூர் -திருவண்ணாமலை சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் திருட்டுத்தனமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 50 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் -திருவண்ணாமலை சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் திருட்டுத்தனமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கிருஷ்ணகிரி கும்மனூர் பகுதியை சேர்ந்த முனியப்பன் (வயது 36) என்பவர் அங்கு மது வகைகளை பதுக்கி வைத்து விற்றது தெரிய வந்தது.

    அவரை கைது செய்த போலீசார் முனியப்பனிடமிருந்து 50 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    ×