என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மக்காச்சோளத்தில்"
- காரிப் பருவத்தில் பயிர் செய்யப்பட்ட 1500 முதல் 2000 ஹெக்டர் மக்காச்சோளப்யிர்கள் அறுவடை நிலையில் உள்ளது.
- ஒவ்வொரு 10 வரிசைக்கும் 75 செ.மீ. இடைவெளி விட்டு நடவு செய்தல், ஒரு ஏக்கருக்கு 1 எண் விளக்கு பொறி வைத்து தாய் அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்தல் உள்ளிட்டவைகள் அறிவுறுத்தப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் சுமார் 2300 ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சேளாம் பயிரிடப்பட்டுள்ளது. காரிப் பருவத்தில் பயிர் செய்யப்பட்ட 1500 முதல் 2000 ஹெக்டர் மக்காச்சோளப்யிர்கள் அறுவடை நிலையில் உள்ளது.
தற்போது ராபி பருவத்தில் பயிர் செய்யப்பட்ட சுமார் 200 முதல் 250 ஹெக்டர் பரப்பில் மக்காச்சோளம் பயிர்கள் வளர்ச்சி நிலையில் உள்ளது. இப்பயிரில் படைப்புழு தாக்குதல் காணப்படுகிறதா என மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ரவிச்சந்திரன், தரக்கட்டுப்பாட்டு சேலம் வேளாண்மை உதவி இயக்குநர் கவிதா, வாழப்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மணிமேகாலாதேவி, மற்றும் துணை, உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மக்காச்சோளம் பயிரிடபட்ட விவசாயிகளை சந்தித்து மக்காச்சோளம்வ ழிமுறைகளை பின்பற்றிட படைப்புழு கட்டுப்படுத்துவது குறித்து அறிவுறுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளான ஆழ கோடை உழவு செய்து கூட்டுப்புழுவை அழித்தல், அடியுரமாக வேப்பம் புண்ணாக்கு இடுதல், விதை நேர்த்தி செய்து விதைத்தல், ஒவ்வொரு 10 வரிசைக்கும் 75 செ.மீ. இடைவெளி விட்டு நடவு செய்தல், ஒரு ஏக்கருக்கு 1 எண் விளக்கு பொறி வைத்து தாய் அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்தல் உள்ளிட்டவைகள் அறிவுறுத்தப்பட்டது. இதேபோல சேலம் மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் நடந்து வருகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்