search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் போராட்டம்"

    • பஸ்சில் ஏற்ற மறுத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தனியார் பஸ்சை சிறைபிடித்தனர்
    • பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைைய சேர்ந்த சிலர் நேற்று மாலை மதுரையில் சில தனியார் பஸ்கள் மூலம் நிலக்கோட்டைக்கு வந்தனர். இதற்காக மதுரையிலிருந்து பெரியகுளம் செல்லும் தனியார் பஸ்சில் ஏறினர்.

    ஆனால் அவர்களை ஏற்ற கண்டக்டர் மறுத்து விட்டார். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு கல்லூரி மாணவியும் இருந்துள்ளார். அதன்பிறகு அவர்கள் அனைவரும் மற்றொரு பஸ்சில் ஏறி நிலக்கோட்டைக்கு வந்தனர்.

    பஸ் புறப்பட்ட உடன் தங்களை ஏற்ற மறுத்த தனியார் பஸ் குறித்து நிலக்கோட்ைடயில் உள்ள உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து பெரியகுளத்தில் இருந்து மதுரைக்கு திரும்பிய அந்த தனியார் பஸ்சை நிலக்கோட்டையில் பொதுமக்கள் சிறைபிடித்து முற்றுகையிட்டனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்துக்கு நிலக்கோட்டை போலீசார் வந்து சமரசம் செய்தனர். இனி வரும் காலங்களில் நிலக்கோட்ைட பயணிகளை ஏற்றுவதாக கண்டக்டர் தெரிவித்ததை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
    • ஆத்திரம் அடைந்த மக்கள் பூட்டு போட்டு பூட்டினர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கொசமட தெருவில் குயவர் மடம் செயல்பட்டு வருகின்றது. இந்த மடத்தில் கடந்த 1994 முதல் 2022 வரையில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று உள்ளதாகவும், கடந்த 28 ஆண்களாக தேர்தல் நடத்தாமல் தன்னிச்சையாக தற்போதைய நிர்வாகிகள் செயல்படுவதாகவும் குலாலர் சமுதாய மக்கள் நேற்று குயவர் மடத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்திற்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளி குலாலர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மடத்தின் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து வந்து குயவர் மடத்தினை முற்றுகையிட்டனர்.

    அப்போது மடத்தில் தற்போது உள்ள தலைமை 28 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் தன்னிச்சையாக செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சமுதாய மக்களுக்கு மடத்தில் முன்னுரிமை மற்றும் தங்குவதற்கு அனுமதி மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    போராட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மடத்தின் முன்பக்கம் இரும்பு கேட் பூட்டு போட்டு பூட்டப்பட்டு இருந்தது. மேலும் திருவண்ணாமலை டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பூட்டு மற்றும் சங்கிலி வாங்கி வந்து பூட்டு போட்டு பூட்டினர்.

    தொடர்ந்து அவர்களிடம் திருவண்ணாமலை டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இது அவர்கள் திருவண்ணாமலை தாலுகா நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு கோரிக்கை மனு அளிக்க சென்றனர்.

    பின்னர் அவர்கள் கலெக்டர் முருகேஷிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனால் திருவண்ணாமலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×