search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் பயன்பாடு"

    • இந்தியா கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் தீவிரவாதம் தலை தூக்கி, தேச துரோகிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
    • தமிழக ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.

    அவிநாசி:

    திருப்பூர் திருமுருகன்பூண்டியில் பாஜக., நகர அலுவலகம் திறப்பு விழா, பிரதமா் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி, மாற்றுக் கட்சியினா் இணைப்பு விழா ஆகியவை நடைபெற்றன.

    இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகளின் நீண்ட நாள் கனவுத்திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகள் நிறைவடைந்து 30 மாதங்கள் ஆகியும், அரசியல் நோக்கத்துக்காக அத்திட்டத்தை திமுக., நிறுத்தி வைத்துள்ளது. இத்திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    இந்தியா கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் தீவிரவாதம் தலை தூக்கி, தேச துரோகிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் கோவையில் பாலஸ்தீன கொடியேற்றி உள்ளனா். சென்னை கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் வாழ்க கோஷம் எழுப்பப்பட்டுள்ளது.

    கேரள மாநிலம் கொச்சி அருகே கிறிஸ்துவ ஜெபக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழக ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும். அந்த சம்பவங்களின் பின்னணியில் யாா் உள்ளனா். யாா் உதவி செய்கின்றனா் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். தோ்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும். பாஜகவை பொறுத்தவரை கட்சியை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் எந்த நேரத்தில் என்ன பேசுவாா் என்பது அவருக்கே தெரியாது என்றாா்.

    ×