search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களுடன் மேயர் திட்டம்"

    • 49-வது வார்டு பகுதியில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
    • பொதுமக்களின் கோரிக்கையை உடனே சரி செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் மக்களுடன் மேயர் திட்டத்தை மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். மேலும் அதனை செயல்படுத்தும் வகையில் 49-வது வார்டு பகுதியில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி மற்றும் மின் விளக்கு, பூங்கா அமைத்து தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்தனர். கோரிக்கைகளை கேட்டறிந்த மேயர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பொதுமக்களின் கோரிக்கையை உடனே சரி செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து 22 வது வார்டுக்கு உட்பட்ட குமாரநாமபுரம், கந்தசாமி லேஅவுட், ஓடக்காடு பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஆய்வு செய்தார் .அப்போது வகுப்பறை, கழிவறை வசதிகள் தேவை குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார். பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மக்களுடன் மேயர் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதேபோல் மாநகராட்சி பள்ளிகளில் கழிவறைகள், வகுப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு பள்ளிகளாக தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஆய்வின் போது துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி, கோவிந்தராஜ், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

    ×