search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாதானபுரம்"

    • இன்று காலை தொடங்கியது
    • வாள்-வில், அம்புக்கு கொலு மண்டபத்தில் பூஜை நடந்தது

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 26-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவை யொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, அன்ன தானம், வாகனபவனி, நாதஸ் வரக்கச்சேரி, பாட்டுக்கச்சேரி, பரத நாட்டியம் போன்றவை நடைபெற்று வருகிறது.திருவிழாவை யொட்டி இரவில் வெள்ளிக் கலைமான் வாகனம், வெள்ளி காமதேனு வாகனம், வெள்ளி இமயகிரி வாகனம், போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரி வேட்டை திருவிழா 10-ம் திருவிழா வான விஜயதசமியான இன்று (புதன்கிழமை) மாலை நடக்கிறது. இதையொட்டி அம்மன் வேட்டைக்கு எழுந்தருளும் குதிரைக்கு கொள்ளு, காணம் போன்ற உணவு வகைகள் படைத்து பூஜைகள் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் அம்மன் வேட்டைக்கு பயன்படுத்தும் வாள்-வில், அம்புபோன்றஆயுதங்களையும்அதன்அருகில் பாணாசுரன் என்ற அரக்கனின் உருவ பொம்மையும் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது.அதன்பிறகுகாலை 10 மணிக்குகோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம் பழம் மாலைக ளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்குதிரை வாகனத் தில் அம்மன்எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதைத் தொடர்ந்து காலை 11-30 மணிக்கு கோவிலில் இருந்து மகாதானபுரம்நோக்கிஅம்மனின்பரிவேட்டை ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் வெளியே வரும் போதும் கோவிலின் பிரதான நுழைவு வாசல் வழியாக சன்னதி தெருவுக்கு வரும் போதும்போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை அளித்தனர். ஊர்வலத் துக்கு முன்னால் நெற்றிப் பட்டம் அணிவித்து அலங்கரிக்கப் பட்ட 3 யானைகள் அணிவகுத்து சென்றன. அதைத் தொடர்ந்து 2 குதிரைகளில் பக்தர்கள் வேடம்அணிந்து சென்றனர். அதனை அடுத்து கோவில் ஊழியர் ரமேஷ் வாள் ஏந்திய படியும் சுண்டன் பரப்பைச் சேர்ந்த பரம்பரை தர்மகர்த்தா

    வில் - அம்பு ஏந்தியபடியும் சென்றனர். அதனைத் தொடர்ந்து பஞ்ச வாத்தியம் கேரளபுகழ்தையம்ஆட்டம், சிங்காரி மேளம், செண்டை மேளம், ஒயிலாட்டம், கோலாட்டம், தேவராட்டம், மயிலாட்டம், நாதஸ்வரம் மற்றும் 100-க்கும் மேற்பட்டகிராமிய கலைஞர்கள் பங்கேற்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. கோவிலில் இருந்து புறப்பட்ட அம்ம னின் பரிவேட்டை ஊர்வலம் சன்னதி தெரு, தெற்கு ரதவீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதி, மெயின் ரோடு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைப்புளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம், நான்கு வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மாலை 6.30 மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்று அடைகிறது. அங்கு பகவதி அம்மன் பாணாசுரன் என்ற அரக்கனை அம்புகள் எய்து வதம் செய்து அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து மகா தானபுரத்தில் உள்ள நவநீத சந்தான கோபாலகிருஷ்ண சுவாமி கோவிலுக்கு பகவதிஅம்மன் செல்கிறார்.

    அங்கு பகவதி அம்மனுக்கும் நவநீத சந்தான கோபால சுவாமிக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடக்கிறது. அதன் பிறகு அம்மனின் வாகனம் பஞ்சலிங்கபுரத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு எலுமிச்சம் பழம் மாலை அணிவித்து தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி வழிபடுகிறார்கள். அம்மனின் வாகன பவனி முடிந்ததும் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் உள்ளகாரியக்காரன்மடம் வந்து வெள்ளி குதிரை வாகனத்தில் இருந்து மாறி வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 9.30 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்த தும் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம், கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் நிர்வாகம், பக்தர்கள் சங்கம் ஆகியவை இணைந்து செய்து வருகிறது. பரிவேட்டை ஊர்வலத்தையொட்டி நாகர் கோவில்- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையிலும் அஞ்சுகிராமம் கன்னியா குமரி சாலையிலும்இன்று காலை11மணிக்குபிறகு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பரிவேட்டை ஊர்வலத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.எஸ். பார்த்தசாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரை பாரதி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன், கவுன்சிலர் ஆனிரோஸ் தாமஸ், குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் ஞான சேகர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்த், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் செயல் அலுவலர் ராஜேந்திரன், கொட்டாரம் நகர செயலாளர் வைகுண்டபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரிபோலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டு உள்ளனர். கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு பகல் 12 மணி முதல் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    ×