search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகா கும்பாபிேஷகம்"

    • புதிய கொடி மரத்திற்கு மகா கும்பாபிேஷகம் விழாவிற்கான சிறப்பு பூஜைகள் நேற்று தொடங்கியது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் இருந்த பழைய கொடிமரம் சேதமடைந்து விட்டதை தொடர்ந்து புதிய கொடி மரம் தயார் செய்யப் பட்டு கடந்த அக்டோபர் மாதம் 20-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அதை தொடர்ந்து புதிய கொடி மரத்திற்கு மகா கும்பாபிே ஷகம் விழாவிற்கான சிறப்பு பூஜைகள் நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது.

    அப்போது விநாயகர் வழிபாடு, புண்யாக வாசனை, முளைப்பாரி பூஜை, ரக்ஷாபந்தனம், பூர்ணாகுதி தீபாரதனை நடந்தது. அதை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு பஞ்ச காவ்ய பூஜை, கலச பூஜை, சிறப்பு யாக பூஜையும், கலச புறப்பாடு நடந்தது.

    அதைத்தொடர்ந்து துவஜஸ்தம்பம் என்று சொல் கூடிய கொடி மரத்திற்கு மகா கும்பாபிேஷகம் காலை 6.40 மணிக்கு நடந்தது.

    இதில் புதிய கொடி மரத்திற்கு சென்னிமலை முருகன் கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவாச்சா ரியார் கலச நீரை கொடி மரத்தின் மீது ஊற்றினார்.

    அப்போது மலைகோவிலில் திரண்டு இருந்த பக்தர்கள் அரஹர... அரஹர... அரோகரா என கோஷம் எழுப்பினர். அதையடுத்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சரவணன் தலைமையில் செங்குந்த முதலியார் அனைவோர்கள் சமூகத்தினர் செய்திருந்தனர்.

    இதில் ஏராளமான பக்த ர்கள் கலந்து கொண்டனர். அனை வருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    ×