search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் ரோந்தை"

    • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்
    • சட்டம் ஒழுங்கு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் சட்டம் ஒழுங்கு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வெட்டுவானம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே ஏற்ப்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் விசாரித்தார்.

    இதில் இரு பிரிவினரையும் ஆர்டிஓ முன்பு ஆஜர் படுத்தி சுமுக பேச்சு வார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்யவும், இரு பிரிவினருடைய சுமுக பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்ப டவில்லை எனில் இரு பிரிவினர்கள் மீதும் வழக்குப்பதியவும் உத்தரவிட்டுள்ளார்.

    இதையடத்து பள்ளிகொண்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ரோந்து பணிகள் குறித்தும், குற்றச்சம்பவங்களை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், பள்ளி பகுதிகளில் பள்ளி மாணவர்கள் சென்று வரும் நேரங்களில் ரோந்து பணிகள் மேற்கொள்வது குறித்தும் கேட்டறிந்தார்.

    மேலும் இணைய வழி குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் குறித்தும் ஆய்வின் போது கேட்டறிந்தார்.

    இந்த திடீர் ஆய்வின் போது பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன் துணை இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி சிறப்பு தனிப்பிரிவு போலீஸ் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×