search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் குடும்பங்கள்"

    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 15 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருவண்ணமலை கலசபாக்கம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த கிருஷ்ண மூர்த்தி, சந்தவாசலில் பணிபுரிந்த கணபதி, சாத்தனூர் அணையில் பணிபுரிந்த சந்திரன், திருக்காட்டுப் பள்ளியில் பணிபுரிந்த மதிவாணன், வேலாயுதம்பாளையத்தில் தலைமைக் காவலர் சிவசுப்பிரமணியன், வத்தராயிருப்பில் சிறப்பு உதவி ஆய்வாளர் காளிமுத்து, திருச்சியில் போக்குவரத்துபிரிவு, சிறப்பு உதவிஆய்வாளர் சீராளன், கீழச்சீவல்பட்டியில் தலைமைக் காவலர் அண்ணாதுரை, சென்னை பட்டினப்பாக்கத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ்பாபு, ஆற்காட்டில் பெண் தலைமைக் காவலர் அருள்மொழி, மற்றும் வேட்டைக்காரனிருப்பில் உதவிஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடல் நலக்குறைவால் காலமானார்கள்.

    ஈரோடு மாவட்டம் சிறுவலூரில் தலைமை காவலராகப் பணிபுரிந்த மகேந்திரன், தூத்துக்குடி மாவட்டம், குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வு துறையில் அவில்தாராகப் பணிபுரிந்த முருகேஷ் ஸ்ரீகாந்த், ஆழ்வார்திருநகரில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த பால்ஐசக், சந்தவாசலில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த தசரா ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

    இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 15 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    ×