search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி விதை"

    • வேளாண் அலுவலகத்தில் போலி விதை நெல் வழங்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது
    • கலெக்டரிடம் நேரிடையாக முறையிட்டார்

    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், இனங்கூர் மேலக்காம்பட்டியை சேர்ந்த விவசாயி ஒருவர் நெற்பயிரை ெகாண்டு வந்து அதனை கலெக்டர் பிரபு சங்கரிடம் காட்டினார். பின்னர் அவர் கூறியபோது, நங்கவரம் வேளாண் அலுவலகத்தில் பொன்மணி விரை நெல் வாங்கி 5 ஏக்கரில் நெல் சாகுபடி செய்தேன். ஆனால் அங்கு பொன்மணி விரைநெல்லுடன் மேலும் 2 ரகங்கள் கலந்த விதை நெல்லை அளித்துவிட்டனர். இதனால், தற்போது வளர்ந்துள்ள பயிர்களில் ஒரு ரகம் 15 நாட்களுக்கு முன்பு பூப்பூத்துள்ளது. மற்றொரு ரகம் கதிர் பிடித்துள்ள நிலையில் மற்றவை கருகியும், சாய்ந்தும் கிடக்கின்றன எனக்கூறி உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தார். அவர் கொண்டு வந்த நெற்பயிரை கோவை வேளாண் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.


    • வேளாண் துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு போலி விதைகளை விற்பனை செய்த உரக்கடை , மக்காச்சோளம் கம்பெனி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • 0 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் சாகுபடி அறுவடை சமயத்தில் இரண்டு மூன்று கதிர்கள் வந்ததால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் பகுதியில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்து இருந்த நிலையில் தற்போது போலி விதைகளால் ஒரு கதிர் பிடிக்க வேண்டிய தருணத்தில் தற்பொழுது இரண்டு, மூன்று என வந்துள்ளதால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண்துறை இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:- குடிமங்கலம் பகுதியில் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணை தண்ணீரின் மூலம் விவசாயிகள் அதிகளவு மக்காச்சோளம் சாகுபடி செய்து வருகிறோம்.

    இந்தநிலையில் பூளவாடி பகுதியில் உள்ள உரக்கடை மூலம் மக்காச்சோளம் விதை வாங்கி நடவு செய்த நிலையில் தற்பொழுது சுமார் 10 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் சாகுபடி அறுவடை சமயத்தில் இரண்டு மூன்று கதிர்கள் வந்ததால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ஒரு ஏக்கருக்கு 40 குவிண்டாலுக்கு மேல் வரும் என விளம்பரப்படுத்தி வழங்கபட்டபோலி விதைகளால் பாதி அளவு கூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு போலி விதைகளை விற்பனை செய்த உரக்கடை , மக்காச்சோளம் கம்பெனி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் விவசாயிகள் ஏக்கருக்கு 50 ஆயிரம் செலவு செய்து இருக்கும் நிலையில் உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் . தவறும் பட்சத்தில் விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.

    ×