search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போர்வை"

    • சீர்காழி பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 50 பேருக்கு நிவாரண உதவிகள்.
    • ரூ.2ஆயிரம் மதிப்பிலான அரிசி, மளிகை, போர்வை ஆகியவற்றை வழங்கினார்.

    சீர்காழி:

    விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் 50-வது பொன்விழாவையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    அதன் ஒருபகுதியாக சீர்காழி பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 50 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.வி.ராதா–கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் அனிதா, குடசமாரிட்டன் கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள் பிரவின்வசந்த், அனுஷாபிரவின், அலெக்சாண்டர், ரீனிஷாஜேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து கே.வி.ராதாகிருஷ்ணன், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.2ஆயிரம் மதிப்பிலான அரிசி, மளிகை, போர்வை ஆகியவற்றை வழங்கினார்.

    இதில் அரசு பள்ளி ஆசிரியர் கோவி.நடராஜன் பங்கேற்றார்.

    முன்னதாக பள்ளி முதல்வர் ஜோஸ்வா–பிரபாகரசிங் வரவேற்றார். முடிவில் துணை முதல்வர் சரோஜா நன்றிக் கூறினார்.

    • தேசிய வனக் கொள்கையின்படி, பசுமை வனப்பரப்பு 33 சதவீதம் வரை இருக்க வேண்டும்.
    • தமிழக அரசு விவசாயிகளின் பண்ணை நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வை இயக்கம் என்னும் திட்டத்தை கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

    சேலம்:

    தமிழ்நாட்டின் மொத்த பரப்பில் பசுமை வனப் பரப்பு 24 சதவீதம் என்ற அள வில் உள்ளது. தேசிய வனக் கொள்கையின்படி, பசுமை வனப்பரப்பு 33 சதவீதம் வரை இருக்க வேண்டும். எனவே, தமிழ

    கத்தில் பசுமை வனப்பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதத்திற்கு உயர்த்து வதற்காக தமிழக அரசு விவசாயிகளின் பண்ணை நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வை இயக்கம் என்னும் திட்டத்தை கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் தேக்கு, வேங்கை, சந்தனம், செம்மரம், மகோகனி, வேம்பு உள்பட 27 வகையான மரக்கன்றுகள் வனத்துறை, தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித் துறை நாற்றங்கால் மற்றும் தனியார் நாற்றங்காலில் உற்பத்தி செய்து வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் விநியோகம் செய்யப்பட உள்ளது. அதற்கான மரக்கன்றுகள் தற்போது வளர்க்கப்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்ட விவசாயி கள் தங்களது வரப்பு மற்றும் வயல் ஓரங்களில் மரங்கள் நடவு செய்வதாக இருந்தால் எக்டருக்கு 160 மரக்கன்றுகள் வீதம் அதிகபட்சமாக ஒரு விவசாயி 2 எக்டர் பரப்பிற்கு மரக்கன்றுகள் பெற்று பயன் பெறலாம். ஊடுபயிர் மற்றும் குறைந்த அடர்த்தி நடவு முறையில் வயல் முழுவதும் நடவு செய்வதாக இருந்தால் ஒரு எக்டருக்கு 100 முதல் 500 மரக்கன்றுகள் வழங்கப்படும்.

    இதில் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு இரண்டு எக்டருக்கு 200 முதல் 1000 மரக்கன்றுகள் வரை வழங்கப்படும். மரக்கன்று கள் தேவைப்படும் விவசாயி கள் வேளாண்மை உழவர் நலத்துறையின் உழவன் செயலி மூலம் தங்களது சர்வே எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்தபின் மரக்கன்றுகள் பெற்றுக் கொள்ளலாம்.

    பதிவு செய்யப்பட்ட வயலை தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் ஆய்வு செய்து அளித்திடும் பரிந்துரையின் அடிப்படையில் கன்றுகள் வழங்கப்படும். மேலும், நன்றாக பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படும் மரக்கன்று களுக்கு பராமரிப்பு தொகை யாக 2-ம் ஆண்டில் இருந்து மரக்கன்று ஒன்றுக்கு ரூ.7 வீதம் 3 ஆண்டுகளுக்கு இத்தொகை வழங்கப்படும்.

    மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 2 லட்சத்து 95 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்ய இலக்கு பெறப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே, மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வமாக உள்ள விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டு இலவச மாக மரக்கன்றுகள் பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    ×